இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கைக்குள் நுழைந்த சீனக் கப்பல்!
Jul 29, 2026, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கைக்குள் நுழைந்த சீனக் கப்பல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ‘ஷியான் 6’ நேற்று இலங்கையை வந்தடைந்திருக்கிறது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை தொடர்பாக நீண்ட காலமாகவே மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக, 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

சீனத் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அந்நாடு எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இச்சம்பவத்திற்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான விரிசல் அதிகரித்திருக்கிறது. இது தொடர்பாக 20 கட்டப் பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை.

இதனிடையே, கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியாவை உளவு பார்க்கும் வேலையை சீனா தொடங்கியது. இதற்காக, நமது அண்டை நாடான இலங்கையை பயன்படுத்திக் கொண்டது. அதாவது, இலங்கைக்கு ஏராளமான கடனுதவிகளை வழங்கி இருக்கும் சீனா, அந்நாட்டின் ஹம்பந்தோடா துறைமுகத்தையும் 99 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறது.

எனவே, அத்துறைமுகத்தை விரிவுபடுத்துவதாகக் கூறி, சீனாவின் உளவுக் கப்பல்களை இலங்கைக்கு அனுப்பி இந்தியாவை உளவு பார்த்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் சீன நாட்டுக் கப்பல்களான, ‘ஹை யாங் 24’ மற்றும் ‘யுவான் வாங் 5’ ஆகிய உளவுக் கப்பல்கள் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, இலங்கைக்கு வந்து நமது நிலைகளை உளவு பார்த்திருக்கிறது.

இந்த நிலையில்தான், தற்போது 3-வதாக ஆராய்ச்சிக் கப்பல் என்கிற போர்வையில் மற்றொரு உளவுக் கப்பலை சீனா இலங்கைக்கு அனுப்பி இருக்கிறது. ‘ஷி யான் 6’ என்று அழைக்கப்படும் இந்த ஆராய்ச்சிக் கப்பல், பல 100 கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும், செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் கொண்டது.

இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் இணைந்து இலங்கைக்கு அருகே சர்வதேச கடற்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்கு, அந்நாட்டு அரசிடம் சீனா ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இலங்கை அரசு அனுமதி தராமல் காலதாமதம் தாழ்த்தி வந்தது.

மேலும், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர், இந்தியாவின் கவலைகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே, சீன கப்பலுக்கு அனுமதி தரவில்லை என்று கூறியிருந்தார். அதேசமயம், சீனக் கப்பல் வங்கக் கடலில் சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், “ஷி யான் 6” கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. இதை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதி செய்திருக்கிறது. மேலும், இக்கப்பல் 17 நாட்கள் இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டு கடல் பகுதியில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடும் என்று சீன அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், இலங்கையின் சர்வதேசக் கடற்பகுதியில் இருந்து தமிழகத்தில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, துாத்துக்குடி உள்ளிட்ட 6 துறைமுகங்களையும் எளிதில் உளவு பார்த்து தகவல்களை சேகரிக்க முடியும். இதன் காரணமாகவே, சீனாவின் “ஷி யான் 6” கப்பலை இலங்கையில் நிறுத்த இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.

எனினும், இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு சீனா உதவியதால், அந்நாட்டுக்கு உதவும் வகையில் ஆராய்ச்சிக் கப்பலை நிலைநிறுத்த அந்நாடு அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags: srilankachina ship
ShareTweetSendShare
Previous Post

காரை கால்களால் பந்தாடி விளையாடிய யானை!

Next Post

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது! – அளுநர் தமிழிசை.

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies