கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: ரஷ்யா திடீர் சோதனை!
Mar 15, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: ரஷ்யா திடீர் சோதனை!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த திட்டமா?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணு ஆயுத சோதனைகள் தடை ஒப்பந்தத்துக்கான சட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான மசோதா ரஷ்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், அந்நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

எதிரி நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உலக நாடுகள் பலவும் அணு ஆயுத சோதனையை நடத்தி வந்தன. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் அணு ஆயுத சோதனை நடத்துவதை பெருமையாகக் கருதின. இதனால், வல்லரசு நாடுகள் தங்கள் மீது படையெடுக்குமோ என்று சிறிய நாடுகள் அச்சத்தில் இருந்தன.

இதையடுத்து, அணு ஆயுத சோதனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, 1996-ம் ஆண்டு அணு ஆயுத சோதனை செய்வதைத் தடை செய்ய ஒப்புக் கொண்டு, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 178 நாடுகள் சா்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் பிறகு, புதிதாக அணு ஆயுத சோதனை செய்வதை உலக நாடுகள் தவிர்த்து வந்தன.

இதனிடையே, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தலையிட்டால், அந்நாடுகள் மீதும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், “புரேவெஸ்ட்னிக்” எனப்படும் அணு ஆயுதத்தை ஏந்திபடி உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய புதிய ஏவுகணையை ரஷ்யா கடந்த 5-ம் தேதி வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுத சோதனைகள் தடை ஒப்பந்தத்துக்கான சட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான மசோதாவையும், ரஷ்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது.

இதன் பிறகே, ஒரு மாபெரும் அணு ஆயுத சோதனை நிகழ்த்தியதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. இதுகுறித்து ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில், “கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை, ரஷ்யாவின் தூரக் கிழக்கில் உள்ள சோதனை தளத்திலிருந்தும், மற்றொரு அணு ஆயுத ஏவுகணை பேரண்ட்ஸ் கடலில் உள்ள அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்தும் ஏவப்பட்டுச் சோதிக்கப்பட்டது. அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் எதிரி நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இச்சோதனை நடத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால், உக்ரைன் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா இச்சோதனையை நடத்தி இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. எனினும், உக்ரைனைத் தாக்குவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அமெரிக்க தெரிவித்திருக்கிறது.

Tags: russianuclear strike test
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது : கமல்நாத்.

Next Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies