கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: ரஷ்யா திடீர் சோதனை!
Jul 29, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: ரஷ்யா திடீர் சோதனை!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த திட்டமா?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணு ஆயுத சோதனைகள் தடை ஒப்பந்தத்துக்கான சட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான மசோதா ரஷ்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், அந்நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

எதிரி நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உலக நாடுகள் பலவும் அணு ஆயுத சோதனையை நடத்தி வந்தன. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் அணு ஆயுத சோதனை நடத்துவதை பெருமையாகக் கருதின. இதனால், வல்லரசு நாடுகள் தங்கள் மீது படையெடுக்குமோ என்று சிறிய நாடுகள் அச்சத்தில் இருந்தன.

இதையடுத்து, அணு ஆயுத சோதனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, 1996-ம் ஆண்டு அணு ஆயுத சோதனை செய்வதைத் தடை செய்ய ஒப்புக் கொண்டு, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 178 நாடுகள் சா்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் பிறகு, புதிதாக அணு ஆயுத சோதனை செய்வதை உலக நாடுகள் தவிர்த்து வந்தன.

இதனிடையே, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தலையிட்டால், அந்நாடுகள் மீதும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், “புரேவெஸ்ட்னிக்” எனப்படும் அணு ஆயுதத்தை ஏந்திபடி உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய புதிய ஏவுகணையை ரஷ்யா கடந்த 5-ம் தேதி வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுத சோதனைகள் தடை ஒப்பந்தத்துக்கான சட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான மசோதாவையும், ரஷ்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது.

இதன் பிறகே, ஒரு மாபெரும் அணு ஆயுத சோதனை நிகழ்த்தியதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. இதுகுறித்து ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில், “கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை, ரஷ்யாவின் தூரக் கிழக்கில் உள்ள சோதனை தளத்திலிருந்தும், மற்றொரு அணு ஆயுத ஏவுகணை பேரண்ட்ஸ் கடலில் உள்ள அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்தும் ஏவப்பட்டுச் சோதிக்கப்பட்டது. அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் எதிரி நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இச்சோதனை நடத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால், உக்ரைன் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா இச்சோதனையை நடத்தி இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. எனினும், உக்ரைனைத் தாக்குவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அமெரிக்க தெரிவித்திருக்கிறது.

Tags: russianuclear strike test
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது : கமல்நாத்.

Next Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies