போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: ஒரு வீரர் உட்பட 5 பேர் காயம்!
Oct 10, 2025, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: ஒரு வீரர் உட்பட 5 பேர் காயம்!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் நிறுத்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இராணுவ வீரர் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாகவே எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் ஒரு பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. மேலும், ஜம்மு காஷ்மீர் முழுவதையுமே ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. அதோடு, இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளையும் களமிறக்கி விட்டு வருகிறது.

இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அவ்வப்போது பாகிஸ்தான் அத்துமீறுவதும், அதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதுமாக இருந்து வருகிறது. கடைசியாக நடந்த கார்கில் போருக்குப் பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்திருக்கின்றன. இந்த நிலையில்தான், போர் நிறுத்தத்தை மீறி, பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்கள் ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

அதாவது, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், நேற்றிரவு திடீரென பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அரினியா, ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள 5 இந்திய நிலைகளைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய இராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நீடித்தது.

இதனால் பொதுமக்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக வீட்டிற்குள்ளே இருந்தனர். எனினும், பாகிஸ்தான் வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும், பொதுமக்கள் 4 பேரும் காயமடைந்தனர். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், நேற்றிரவு 8 மணியில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் எல்லையோர மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக எல்லைக் காவல்படை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில்,  ”அக்டோபர் 26 இரவு சுமார் 8 மணி அளவில், ஜம்மு பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பி.எஸ்.எஃப். (எல்லைப் பாதுகாப்பு படை) வீரர்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் ரேஞ்சர்கள் எங்கள் அருகிலுள்ள பகுதிகளை குறிவைத்து துப்பாக்கிச் சூட்டை நீட்டித்தனர்.

சுமார் 9 மணியளவில், பாகிஸ்தான் ரேஞ்சர்கள் எல்லைப் புறக்காவல் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து இயந்திரத் துப்பாக்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சில குண்டுகள் அர்னியா நகரில் இருக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் தாக்கியது. இதில் ரஜினி தேவி உட்பட 4 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டது. மேலும், சுமார் 10.40 மணி அளவில், கனரக இயந்திரத் துப்பாக்கியை பயன்படுத்தி, எங்கள் பகுதியைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

இதற்கும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களால் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. நேற்று இரவு தொடங்கிய துப்பாக்கிச் சூடு இன்று அதிகாலை 2 மணி வரை நீடித்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில்  சி.டி.பசவராஜ் என்கிற வீரருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனினும், சேதாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லைப் பாதுகாப்பு படை எப்போதும் விழிப்புடன் இருக்கிறது. எல்லையில் ஊடுருவல் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: pakistanjammu kashmirattackBorder
ShareTweetSendShare
Previous Post

தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான் : வெற்றி யாருக்கு ?

Next Post

உத்தரகண்ட் – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு!

Related News

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் – பயணிகள் அவதி!

சேலத்தில் 1 மணி நேரம் கனமழை – சாலைகளில் வெள்ளம்!

பணக்காரர்களின் திருமண விழாவில் மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

திமுகவில் இணைந்த விருதுநகர் காங்கிரஸ் நிர்வாகி – கூட்டணியில் சலசலப்பு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காசா போர் நிறுத்தத்திற்கு வாழ்த்து

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies