தமிழக தொல்லியல் துறை ஆந்திராவில் அகழாய்வு: மத்திய அரசு அனுமதி!
Jul 24, 2025, 02:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக தொல்லியல் துறை ஆந்திராவில் அகழாய்வு: மத்திய அரசு அனுமதி!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலத்தில் தமிழர்களின் வரலாறு சார்ந்த பகுதிகளில் அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

10-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் பெரும்பகுதியை இராஜராஜ சோழன் ஆட்சி செய்தார். அதே காலகட்டத்தில், தற்போதைய ஆந்திராவை கீழை சாளுக்கியர்களும், கர்நாடகத்தை மேலை சாளுக்கியர்களும் ஆட்சி செய்தனர். பின்னர், அப்பகுதிகளும் சோழர்களின் ஆட்சிக்குள் வந்தன.
இதைத்தொடர்ந்து, சோழர்கள் கீழை சாளுக்கியர்களுடன் மண உறவு வைத்து, ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சோழர்கள் கீழை சாளுக்கியர்களிடம் ஒப்படைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அங்கு பல்வேறு கோவில்கள் உள்ளிட்ட கட்டுமானங்களையும், நலத்திட்டங்களையும் சோழர்கள் மேற்கொண்டனர். இது தொடர்பான தமிழ் கல்வெட்டுகள், வேங்கி உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுத் தகவல்களைச் சேகரிக்கும் வகையில், தமிழக தொல்லியல் துறை, மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில், மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

மேலும், கடல்வழி தொடர்பில், கிழக்கு கடற்கரை முழுவதும் ஆதிக்கம் செலுத்திய சோழர்கள், சாளுக்கியர்களின் பாளூர் பகுதியிலும் செல்வாக்கு பெற்றிருந்தனர். அதுமட்டுமின்றி, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, தமிழர்கள் வெளிநாட்டினருடன் தொடர்பில் இருந்ததற்கான சான்றுகள், பாளூரில் அதிகம் கிடைத்துள்ளன. அந்த பகுதியிலும் அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு ஆந்திர அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

விரைவில், தமிழக தொல்லியல் துறையும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் இணைந்து, அப்பகுதிகளில் அகழாய்வு பணிகளைத் தொடங்க உள்ளன.
அகழாய்வு சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் முறையிலான தரவுகளுடன், தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

அதேபோல், கர்நாடக மாநிலம் தளக்காடு, கேரள மாநிலம் முசிறி உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு செய்ய, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடம், தமிழக தொல்லியல் துறை அனுமதிகோரி உள்ளது.

Tags: Tamil Nadu Department of Archeology Excavation in Andhra Pradesh
ShareTweetSendShare
Previous Post

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி!

Next Post

இல்லத்தரசிகளுக்கு சின்ன வெங்காயம் வடிவில் மீண்டும் ஒரு சோதனை வந்துள்ளது!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies