தமிழக தொல்லியல் துறை ஆந்திராவில் அகழாய்வு: மத்திய அரசு அனுமதி!
Sep 12, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக தொல்லியல் துறை ஆந்திராவில் அகழாய்வு: மத்திய அரசு அனுமதி!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திர மாநிலத்தில் தமிழர்களின் வரலாறு சார்ந்த பகுதிகளில் அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

10-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் பெரும்பகுதியை இராஜராஜ சோழன் ஆட்சி செய்தார். அதே காலகட்டத்தில், தற்போதைய ஆந்திராவை கீழை சாளுக்கியர்களும், கர்நாடகத்தை மேலை சாளுக்கியர்களும் ஆட்சி செய்தனர். பின்னர், அப்பகுதிகளும் சோழர்களின் ஆட்சிக்குள் வந்தன.
இதைத்தொடர்ந்து, சோழர்கள் கீழை சாளுக்கியர்களுடன் மண உறவு வைத்து, ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சோழர்கள் கீழை சாளுக்கியர்களிடம் ஒப்படைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அங்கு பல்வேறு கோவில்கள் உள்ளிட்ட கட்டுமானங்களையும், நலத்திட்டங்களையும் சோழர்கள் மேற்கொண்டனர். இது தொடர்பான தமிழ் கல்வெட்டுகள், வேங்கி உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுத் தகவல்களைச் சேகரிக்கும் வகையில், தமிழக தொல்லியல் துறை, மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில், மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

மேலும், கடல்வழி தொடர்பில், கிழக்கு கடற்கரை முழுவதும் ஆதிக்கம் செலுத்திய சோழர்கள், சாளுக்கியர்களின் பாளூர் பகுதியிலும் செல்வாக்கு பெற்றிருந்தனர். அதுமட்டுமின்றி, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, தமிழர்கள் வெளிநாட்டினருடன் தொடர்பில் இருந்ததற்கான சான்றுகள், பாளூரில் அதிகம் கிடைத்துள்ளன. அந்த பகுதியிலும் அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு ஆந்திர அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

விரைவில், தமிழக தொல்லியல் துறையும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் இணைந்து, அப்பகுதிகளில் அகழாய்வு பணிகளைத் தொடங்க உள்ளன.
அகழாய்வு சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் முறையிலான தரவுகளுடன், தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

அதேபோல், கர்நாடக மாநிலம் தளக்காடு, கேரள மாநிலம் முசிறி உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு செய்ய, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடம், தமிழக தொல்லியல் துறை அனுமதிகோரி உள்ளது.

Tags: Tamil Nadu Department of Archeology Excavation in Andhra Pradesh
Share
Tweet
SendShare
Previous Post

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி!

Next Post

இல்லத்தரசிகளுக்கு சின்ன வெங்காயம் வடிவில் மீண்டும் ஒரு சோதனை வந்துள்ளது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies