காங்கிரஸ் ஒரு காலாவதியான செல்போன்: பிரதமர் மோடி தாக்கு!
Oct 23, 2025, 02:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் ஒரு காலாவதியான செல்போன்: பிரதமர் மோடி தாக்கு!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சி ஒரு காலாவதியான செல்போன். 10, 12 வருடங்களுக்கு முன்பு செல்போன் திரைகள் எப்படி உறைந்து கிடந்தனவோ அதேபோலதான் காங்கிரஸ் கட்சியும் செயலிழந்து கிடந்தது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

டெல்லியில் நடந்து 7-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “2014 வெறும் தேதியல்ல, மாற்றம். காங்கிரஸ் கட்சி காலாவதியான செல்போனாக இருந்தது. எத்தனை முறை ஸ்வைப் செய்தாலும் அல்லது பட்டனை அழுத்தினாலும், செயல்படாத உறைந்த ஸ்கீனை கொண்ட கலாவதியான போன் போன்று காங்கிரஸ் ஆட்சி இருந்தது.

ரீஸ்டார்ட் செய்தாலும் அல்லது பேட்டரியை சார்ஜ் செய்தாலும் அல்லது பேட்டரியையே மாற்றினாலும் கூட வேலை செய்யவில்லை. இந்த சூழலில்தான், 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் காலாவதியான செல்போன் போன்ற காங்கிரஸ் அரசாங்கத்தை புறந்தள்ளி, நாட்டை ஆள்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளித்தனர். இதன் பிறகு, மக்கள் காலாவதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர்.

மேலும், முன்பு இந்தியா செல்போன்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது. தற்போது உலகின் 2-வது பெரிய மொபைல் உற்பத்தியாளராக மாறி இருக்கிறது. ஜனநாயகமயமாக்கலின் சக்தியை நாங்கள் நம்புகிறோம். வளர்ச்சியின் பலன் ஒவ்வொரு பிரிவையும், பிராந்தியத்தையும் சென்றடைய வேண்டும். இந்தியாவில் உள்ள வளங்களால் அனைவரும் பயனடைய வேண்டும். அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கை இருக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தின் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும். இதற்காக நாங்கள் வேகமாக செயல்பட்டு வருகிறோம். என்னைப் பொறுத்தவரை, இதுவே மிகப்பெரிய சமூக நீதி. சுமார் 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் மூலம் இணைத்துள்ளோம். இதன் மூலம், 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் சுமார் 75 லட்சம் குழந்தைகளை அதிநவீன தொழில்நுட்பத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றன.

மேலும், செமிகண்டக்டர்களை மேம்படுத்த 80,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பி.எல்.ஐ. திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப சுற்றுச்சூழலில் வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டின் வெற்றிக்கு, இந்தியாவில் வலுவான குறைக்கடத்தி உற்பத்தித் துறையை உருவாக்குவது முக்கியம். மொபைல் பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா முன்னதாக 118-வது இடத்தில் இருந்தது. தற்போது 43-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 4 லட்சம் 5ஜி பேஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

Tags: PM Modi7th mobile congress 2023
ShareTweetSendShare
Previous Post

சாதனை படைத்த இந்தியா !

Next Post

பேட்மிண்டனில் மேலும் ஒரு தங்கப்பதக்கம் !

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies