காங்கிரஸ் ஒரு காலாவதியான செல்போன்: பிரதமர் மோடி தாக்கு!
Jul 27, 2026, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் ஒரு காலாவதியான செல்போன்: பிரதமர் மோடி தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 27, 2023, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சி ஒரு காலாவதியான செல்போன். 10, 12 வருடங்களுக்கு முன்பு செல்போன் திரைகள் எப்படி உறைந்து கிடந்தனவோ அதேபோலதான் காங்கிரஸ் கட்சியும் செயலிழந்து கிடந்தது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

டெல்லியில் நடந்து 7-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “2014 வெறும் தேதியல்ல, மாற்றம். காங்கிரஸ் கட்சி காலாவதியான செல்போனாக இருந்தது. எத்தனை முறை ஸ்வைப் செய்தாலும் அல்லது பட்டனை அழுத்தினாலும், செயல்படாத உறைந்த ஸ்கீனை கொண்ட கலாவதியான போன் போன்று காங்கிரஸ் ஆட்சி இருந்தது.

ரீஸ்டார்ட் செய்தாலும் அல்லது பேட்டரியை சார்ஜ் செய்தாலும் அல்லது பேட்டரியையே மாற்றினாலும் கூட வேலை செய்யவில்லை. இந்த சூழலில்தான், 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் காலாவதியான செல்போன் போன்ற காங்கிரஸ் அரசாங்கத்தை புறந்தள்ளி, நாட்டை ஆள்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளித்தனர். இதன் பிறகு, மக்கள் காலாவதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர்.

மேலும், முன்பு இந்தியா செல்போன்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது. தற்போது உலகின் 2-வது பெரிய மொபைல் உற்பத்தியாளராக மாறி இருக்கிறது. ஜனநாயகமயமாக்கலின் சக்தியை நாங்கள் நம்புகிறோம். வளர்ச்சியின் பலன் ஒவ்வொரு பிரிவையும், பிராந்தியத்தையும் சென்றடைய வேண்டும். இந்தியாவில் உள்ள வளங்களால் அனைவரும் பயனடைய வேண்டும். அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கை இருக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தின் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும். இதற்காக நாங்கள் வேகமாக செயல்பட்டு வருகிறோம். என்னைப் பொறுத்தவரை, இதுவே மிகப்பெரிய சமூக நீதி. சுமார் 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் மூலம் இணைத்துள்ளோம். இதன் மூலம், 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் சுமார் 75 லட்சம் குழந்தைகளை அதிநவீன தொழில்நுட்பத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றன.

மேலும், செமிகண்டக்டர்களை மேம்படுத்த 80,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பி.எல்.ஐ. திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப சுற்றுச்சூழலில் வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டின் வெற்றிக்கு, இந்தியாவில் வலுவான குறைக்கடத்தி உற்பத்தித் துறையை உருவாக்குவது முக்கியம். மொபைல் பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா முன்னதாக 118-வது இடத்தில் இருந்தது. தற்போது 43-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 4 லட்சம் 5ஜி பேஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

Tags: PM Modi7th mobile congress 2023
ShareTweetSendShare
Previous Post

சாதனை படைத்த இந்தியா !

Next Post

பேட்மிண்டனில் மேலும் ஒரு தங்கப்பதக்கம் !

Related News

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies