சீனக் கப்பல்கள் நடமாட்டம்: கண்காணிக்கும் இந்திய கடற்படை!
Oct 30, 2025, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனக் கப்பல்கள் நடமாட்டம்: கண்காணிக்கும் இந்திய கடற்படை!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்போது உலகளவில் நிலவும் ஸ்திரமின்மைக்கு மத்தியில், சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் போர்ப்பயிற்சிக்காக பாகிஸ்தானை நோக்கி நகர்கின்றன. இதை இந்தியாவின் P-8I கண்காணிப்பு விமானங்கள் மற்றும் MQ-9B தாக்குதல் ட்ரோன்கள் உள்ளிட்ட இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

உலகளவில் இந்தியாவின் பொறுப்பான பகுதியாகக் கருதப்படும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த சூழலில், பாரசீக வளைகுடா பகுதியில் சீனக் கடற்படையின் நாசக்காரக் கப்பல், வெடிகுண்டு கப்பல் உள்ளிட்ட 3 போர்க் கப்பல்கள் வலம் வருகின்றன. இவை பாகிஸ்தான் கடற்படையுடன் கடல்சார் பயிற்சிக்காக செல்வதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த 3 போர்க் கப்பல்களும் கடந்த மே மாதம் முதல் 44-வது கடற்கொள்ளை எதிர்ப்பு பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. தற்போது, ஏடன் வளைகுடாவில் உள்ள 45-வது கடற்கொள்ளை எதிர்ப்புப் படைகளிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றன. இந்த 45-வது கடற்கொள்ளை பாதுகாப்புப் படையானது அக்டோபர் மாதம் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. இதன்பிறகு இப்பகுதியில் வலம் வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்த பிறகு, அமெரிக்கப் படையெடுப்புகளை கண்காணிக்கும் வகையில் அப்பகுதிகளை நோக்கி சீன மற்றும் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் நெருங்கிச் செல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனப் போர்க் கப்பல்களுடன் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும், அதன் ஆதரவுக் கப்பலான சாங் தாவோவும் உள்ளன. இக்கப்பல்கள்தான் இந்திய கடற்படையால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இந்திய கடற்படை மலாக்கா ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், P-8I நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ட்ரோன்களும் பறந்து, பாகிஸ்தான் கடற்படையுடனான சீன போர்க் கப்பல் பயிற்சியை கண்காணிக்க திட்டமிட்டிருக்கிறது. இக்கடற்படை செப்டம்பர் மாதம் மத்தியில் இருந்து சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 கப்பலையும் கண்காணித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: indian navyclosely trackingchinesesubmarineswarships
ShareTweetSendShare
Previous Post

பேராசிரியருக்கு நூதன தண்டனை – இஸ்லாமிய மதகுருமார்கள் அராஜகம்!

Next Post

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகளை கடைபிடிப்போம்! நம்மையும் நம் தேசத்தையும் பேணிக்காப்போம்!

Related News

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்க ரூ. 70, 000 கோடி முதலீடு – பிரதமர் மோடி

உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத்தக்கது – கரு. நாகராஜன்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் – அரசியல்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு!

தவெகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து என்டிஏ கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் – அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies