சீனக் கப்பல்கள் நடமாட்டம்: கண்காணிக்கும் இந்திய கடற்படை!
Aug 4, 2026, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனக் கப்பல்கள் நடமாட்டம்: கண்காணிக்கும் இந்திய கடற்படை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 27, 2023, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்போது உலகளவில் நிலவும் ஸ்திரமின்மைக்கு மத்தியில், சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் போர்ப்பயிற்சிக்காக பாகிஸ்தானை நோக்கி நகர்கின்றன. இதை இந்தியாவின் P-8I கண்காணிப்பு விமானங்கள் மற்றும் MQ-9B தாக்குதல் ட்ரோன்கள் உள்ளிட்ட இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

உலகளவில் இந்தியாவின் பொறுப்பான பகுதியாகக் கருதப்படும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த சூழலில், பாரசீக வளைகுடா பகுதியில் சீனக் கடற்படையின் நாசக்காரக் கப்பல், வெடிகுண்டு கப்பல் உள்ளிட்ட 3 போர்க் கப்பல்கள் வலம் வருகின்றன. இவை பாகிஸ்தான் கடற்படையுடன் கடல்சார் பயிற்சிக்காக செல்வதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த 3 போர்க் கப்பல்களும் கடந்த மே மாதம் முதல் 44-வது கடற்கொள்ளை எதிர்ப்பு பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. தற்போது, ஏடன் வளைகுடாவில் உள்ள 45-வது கடற்கொள்ளை எதிர்ப்புப் படைகளிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றன. இந்த 45-வது கடற்கொள்ளை பாதுகாப்புப் படையானது அக்டோபர் மாதம் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. இதன்பிறகு இப்பகுதியில் வலம் வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்த பிறகு, அமெரிக்கப் படையெடுப்புகளை கண்காணிக்கும் வகையில் அப்பகுதிகளை நோக்கி சீன மற்றும் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் நெருங்கிச் செல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனப் போர்க் கப்பல்களுடன் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும், அதன் ஆதரவுக் கப்பலான சாங் தாவோவும் உள்ளன. இக்கப்பல்கள்தான் இந்திய கடற்படையால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இந்திய கடற்படை மலாக்கா ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், P-8I நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ட்ரோன்களும் பறந்து, பாகிஸ்தான் கடற்படையுடனான சீன போர்க் கப்பல் பயிற்சியை கண்காணிக்க திட்டமிட்டிருக்கிறது. இக்கடற்படை செப்டம்பர் மாதம் மத்தியில் இருந்து சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 கப்பலையும் கண்காணித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: indian navyclosely trackingchinesesubmarineswarships
ShareTweetSendShare
Previous Post

பேராசிரியருக்கு நூதன தண்டனை – இஸ்லாமிய மதகுருமார்கள் அராஜகம்!

Next Post

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகளை கடைபிடிப்போம்! நம்மையும் நம் தேசத்தையும் பேணிக்காப்போம்!

Related News

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies