தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அரசு பதவிகள் வழங்கப்படுவதாகவும், அது தொடர்பான அரசாணைகள் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு சிறப்பு அதிகாரி நியமனம் தொடர்பான அரசாணை வெளியானது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டது.
இதன்பின், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு அரசு பொறுப்புகள் வழங்கப்பட்டன.
4 பேரின் நியமனங்கள் குறித்த அரசாணை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு பாதுகாப்பாக செல்லும் பவுண்சர் நயீம் மூஸாவுக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெளிப்படையான நிர்வாகம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில், அரசு பதவிகள் மற்றும் நியமனங்கள் குறித்த முழுமையான விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
















