பழனி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக மேலும் இருவரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் 4 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே பத்திரப்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகி வரும் நிலையில், மேலும் இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலக உதவியாளர் சிவசங்கரி மற்றும் சார்பதிவாளர் பாலசந்தர் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சிபிசிஐடி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















