சமஸ்கிருதம் நமது அடையாளத்தின் மொழி: பிரதமர் மோடி!
Mar 15, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமஸ்கிருதம் நமது அடையாளத்தின் மொழி: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 27, 2023, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமஸ்கிருதம் என்பது பாரம்பரியத்தின் மொழி மட்டுமல்ல, நமது முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின் மொழி. பல மொழிகளுக்கு தாய் மொழி என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சித்ரகூடில் உள்ள காஞ்ச் மந்திரில் பிரார்த்தனை செய்தார். பின்னர், துளசி பீடத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் உலகில் எத்தனையோ மொழிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. பழைய மொழிகளுக்குப் பதிலாக புதிய மொழிகள் வந்திருக்கின்றன. ஆனால், நமது கலாச்சாரம் இன்னும் அப்படியே உள்ளது. சமஸ்கிருதம் காலப்போக்கில் செம்மையடைந்ததே தவிர, மாசுபடவில்லை.

ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தில் இந்தியாவை அழிக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமஸ்கிருத மொழியை முற்றிலுமாக அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுதந்திரம் பெற்றோம், ஆனால் அடிமை மனப்பான்மை கொண்டவர்கள் சமஸ்கிருதத்தைப் பற்றி ஒரு பக்கச்சார்பான கருத்தைக் கொண்டிருந்தனர். மக்கள் தங்கள் தாய்மொழியை அறிந்தால், மற்ற நாடுகள் அதைப் பாராட்டுவார்கள். ஆனால் அவர்கள் சமஸ்கிருத மொழியைப் பின்தங்கியதன் அடையாளமாகக் கருதுகிறார்கள்.

இவ்வாறான மனநிலை கொண்டவர்கள் கடந்த ஆயிரம் வருடங்களாக வெற்றியடையவில்லை. எதிர்காலத்திலும் வெற்றியடைய மாட்டார்கள். இன்று பல ராமர் கோவில்களில் பிரார்த்தனை செய்வதை பாக்கியமாக உணர்கிறேன். ஜகத்குரு ராமானந்தாச்சார்யாவின் ஆசீர்வாதத்தையும் நான் நாடினேன். சித்ரகூடம் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கிறது” என்றார்.

சித்ரகூடில் உள்ள காஞ்ச் மந்திர் 3 சிகரங்கள் கொண்ட கோவில். இக்கோவிலின் கருவறையில் இராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோரின் அழகான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு நாளும் ஒரு பூசாரி மூலம் சேவை செய்யப்படுகிறது. ஸ்ரீதுளசி பீத் சேவா நியாஸ் என்பது மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூடில் உள்ள ஜான்கி குந்த் என்ற இடத்தில் உள்ள ஒரு மத மற்றும் சமூக சேவை நிறுவனமாகும்.

1987-ம் ஆண்டு துளசி ஜெயந்தி தினத்தன்று குருஜியால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. துளசி பீடம் இந்தியாவிலும் உலகிலும் இந்து மதக் கருப்பொருள்கள் பற்றிய இலக்கியங்களை வெளியிடும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiMadya PradeshTulsi Peedam
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் வருகை தந்த பாஜக குழு – அடுத்து என்ன?

Next Post

ராகுல்காந்தியை பிரதமராக்க நினைக்கும் சோனியா – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Related News

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies