சமஸ்கிருதம் நமது அடையாளத்தின் மொழி: பிரதமர் மோடி!
Sep 20, 2026, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமஸ்கிருதம் நமது அடையாளத்தின் மொழி: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 27, 2023, 07:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமஸ்கிருதம் என்பது பாரம்பரியத்தின் மொழி மட்டுமல்ல, நமது முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின் மொழி. பல மொழிகளுக்கு தாய் மொழி என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சித்ரகூடில் உள்ள காஞ்ச் மந்திரில் பிரார்த்தனை செய்தார். பின்னர், துளசி பீடத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் உலகில் எத்தனையோ மொழிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. பழைய மொழிகளுக்குப் பதிலாக புதிய மொழிகள் வந்திருக்கின்றன. ஆனால், நமது கலாச்சாரம் இன்னும் அப்படியே உள்ளது. சமஸ்கிருதம் காலப்போக்கில் செம்மையடைந்ததே தவிர, மாசுபடவில்லை.

ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தில் இந்தியாவை அழிக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமஸ்கிருத மொழியை முற்றிலுமாக அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுதந்திரம் பெற்றோம், ஆனால் அடிமை மனப்பான்மை கொண்டவர்கள் சமஸ்கிருதத்தைப் பற்றி ஒரு பக்கச்சார்பான கருத்தைக் கொண்டிருந்தனர். மக்கள் தங்கள் தாய்மொழியை அறிந்தால், மற்ற நாடுகள் அதைப் பாராட்டுவார்கள். ஆனால் அவர்கள் சமஸ்கிருத மொழியைப் பின்தங்கியதன் அடையாளமாகக் கருதுகிறார்கள்.

இவ்வாறான மனநிலை கொண்டவர்கள் கடந்த ஆயிரம் வருடங்களாக வெற்றியடையவில்லை. எதிர்காலத்திலும் வெற்றியடைய மாட்டார்கள். இன்று பல ராமர் கோவில்களில் பிரார்த்தனை செய்வதை பாக்கியமாக உணர்கிறேன். ஜகத்குரு ராமானந்தாச்சார்யாவின் ஆசீர்வாதத்தையும் நான் நாடினேன். சித்ரகூடம் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கிறது” என்றார்.

சித்ரகூடில் உள்ள காஞ்ச் மந்திர் 3 சிகரங்கள் கொண்ட கோவில். இக்கோவிலின் கருவறையில் இராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோரின் அழகான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு நாளும் ஒரு பூசாரி மூலம் சேவை செய்யப்படுகிறது. ஸ்ரீதுளசி பீத் சேவா நியாஸ் என்பது மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூடில் உள்ள ஜான்கி குந்த் என்ற இடத்தில் உள்ள ஒரு மத மற்றும் சமூக சேவை நிறுவனமாகும்.

1987-ம் ஆண்டு துளசி ஜெயந்தி தினத்தன்று குருஜியால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. துளசி பீடம் இந்தியாவிலும் உலகிலும் இந்து மதக் கருப்பொருள்கள் பற்றிய இலக்கியங்களை வெளியிடும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiMadya PradeshTulsi Peedam
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம் வருகை தந்த பாஜக குழு – அடுத்து என்ன?

Next Post

ராகுல்காந்தியை பிரதமராக்க நினைக்கும் சோனியா – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Related News

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies