பிரதமர் மோடி அக்டோபர் 31-ம் தேதி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திகிறார்!
Aug 15, 2025, 09:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி அக்டோபர் 31-ம் தேதி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திகிறார்!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவாக என் மண் என் தேசம் இயக்கத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.

அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் 8000-க்கும் மேற்பட்ட அமிர்தக் கலசங்களுடன் தில்லி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி 31 அக்டோபர் அன்று விஜய் சௌக் கடமைப் பாதையில் என் மண் என் தேசம் விழாவில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்வு என் மண் என் தேசம் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அமிர்தக் கலச யாத்திரையின் நிறைவைக் குறிப்பதாக அமையும்.

இதில் 766 மாவட்டங்களில் உள்ள 7000 வட்டாரங்களைச் சேர்ந்த அமிர்தக் கலச யாத்ரிகர்கள் கலந்து கொள்கின்றனர். சுதந்திரத்தின் 75ஆண்டுகளைக் கொண்டாடுவதற்காக 2021 மார்ச் 12 அன்று தொடங்கிய விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் இரண்டு ஆண்டு கால இயக்கத்தின் நிறைவையும் இது குறிக்கும். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், பொதுமக்களின் உற்சாகமான பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டன.

என் மண் என் தேசம் தொடர்பான நிகழ்ச்சியில் தன்னாட்சி அமைப்பான மேரா யுவ பாரத் தொடங்கப்படவுள்ளது. இது இளைஞர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவும், இளைஞர்களை வளர்ச்சிக்கான ஊக்கச் சக்திகளாக மாற்றவும் உதவும்.

இந்தத் தன்னாட்சி அமைப்பின் நோக்கம் இளைஞர்களை சமூக மாற்ற முகவர்களாகவும், தேசத்தை உருவாக்குபவர்களாகவும் மாற ஊக்குவிப்பதாகும். இது அரசுக்கும், மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக அமையும்.

என் மண் என் தேசம் நிறைவு நிகழ்ச்சிக்காக, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமிர்தக் கலச யாத்ரிகர்கள் அக்டோபர் 30 மற்றும் 31ஆகிய தேதிகளில் கடமைப் பாதை விஜய் சௌக்கில் நடைபெறும் இரண்டு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இதற்காக  சிறப்பு ரயில்கள், பேருந்துகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து போன்ற பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் அக்டோபர் 29 ஆம் தேதியன்று தில்லியை அவர்கள்  அடைகின்றனர்.

இந்த அமிர்தக் கலச யாத்ரிகர்கள் குர்கானில் உள்ள தஞ்சிரி முகாம் மற்றும் தில்லியில் உள்ள ராதா சோமி சத்சங் பியாஸ் முகாம் ஆகிய இரண்டு முகாம்களில் தங்குவார்கள்.

அக்டோபர் 30-ம்தேதி, அனைத்து மாநிலங்களில் இருந்து சென்றவர்கள் மற்றும்  அந்தந்த வட்டார மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் கலசத்திலிருந்து மண்ணை ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், ஒரு பெரிய அமிர்த கலசத்தில் வைப்பார்கள்.

அமிர்தக் கலச மண், விழாவில் ஒவ்வொரு மாநிலத்தின் பிரபலமான கலை வடிவங்கள் காட்சிப்படுத்தப்படும். காலை, 10:30 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சி, மாலை வரை நடைபெறும்.

வரும் 31ம் தேதி மதியம், 12:00 மணி முதல் 2:00 மணி வரை, கலை நிகழ்ச்சிகளுடன், பொது நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி அமிர்தக் கலச யாத்ரிகர்கள் மற்றும் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

இந்தியா சுதந்திரமாக சுவாசிக்கவும் செழிக்கவும் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களை அப்போது அவர் நினைவு கூறுகிறார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

பந்துவீச்சு பயிற்சியில் விராட் கோலி !

Next Post

ரோஜ்கர் மேளா: 51,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் பிரதமர் மோடி!

Related News

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies