பந்துவீச்சு பயிற்சியில் விராட் கோலி !
May 2, 2026, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பந்துவீச்சு பயிற்சியில் விராட் கோலி !

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சியின் போது இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி பவுலிங் செய்து பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை இந்தியா விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் இந்திய அணி பிரச்சனையில் சிக்கும் போதெல்லாம், காப்பாளன் போல் விராட் கோலி இந்திய அணியை மீட்டு வருகிறார்.

இதுவரை விராட் கோலி விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதம் உட்பட 354 ரன்களுடன் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அத்தனை பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது, விராட் கோலி கடைசி வரை நின்று வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் விராட் கோலி பீஸ்ட் பார்மில் இருப்பதாக இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார். இதன்பின் அந்த ஓவரை நிறைவு செய்வதற்காக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலியை அழைத்தார்.

இதன்பின் 3 பந்துகளை வீசிய விராட் கோலி 2 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து அட்டாக்கில் இருந்து வெளியேறினார். திடீரென விராட் கோலி பவுலிங் செய்ய அழைக்கப்பட்டது இரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடுத்து விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பலரும் நேற்றிரவே லக்னோ சென்றடைந்தனர். இதன்பின் இன்று இந்திய அணி வீரர்கள் மாலை நேர பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு, நட்சத்திர வீரர் விராட் கோலி பவுலிங் செய்து பயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆப் ஸ்பின் வீசி பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் உதவி செய்தார். தற்போது விராட் கோலி பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் விலகியுள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்பும் வகையில் சில ஓவர்களையாவது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வீச வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Tags: virat kohliindia cricket team
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் 10 உறுதியான உறுதி மொழிகள் – வானதி சீனிவாசன் புகழாரம்!

Next Post

பிரதமர் மோடி அக்டோபர் 31-ம் தேதி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திகிறார்!

Related News

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,43,000 கோடியாக உயர்வு!

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies