பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரான வளர்ச்சியில் செல்வதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை (bjp vision document) வெளியிட்ட அக்கட்சி தலைவர் ஜே.பி. நட்டா உரையாற்றினார்.
அப்போது, பல கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றன. ஆனால் அவை காகிதங்கள் மட்டும் தான்.ஏனெனில் அதனை தொடரப்போகிறார்களா என்பது அவர்களுக்கே தெரியாது. பாஜக நீண்ட ஆய்வுக்கு பின் இந்த (தொலைநோக்கு ஆவணம் )தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது.
நமது நாட்டின் அரசியல் களத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். ஒரு காலத்தின் இந்தியாவின் பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. ஆனால் பொருளாதார வல்லுனர்களின் கருத்துப்படி இந்தியா நிலையான பொருளாதாரத்தை நோக்கி முன்னேறுகிறது. இவை அனைத்தும் கடந்த 9 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தைத் தடுக்க போதையில்லா மிசோரம் என்ற இயக்கத்தை நாங்கள் தொடங்குவோம். கால்பந்து மல்யுத்தம், பளு தூக்குதல் மற்றும் ஹாக்கி ஆகியவற்றில் வலுவான முக்கியத்துவத்துடன் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு முழு நிதியுதவி மற்றும் உதவித்தொகையுடன் மிசோரம் ஸ்போர்ட்ஸ் அகாடமியை நிறுவுவோம் என உறுதியளிக்கிறேன்.
எஸ்இடிபி அமலாக்கத்தில் உள்ள அனைத்து முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்போம். என நட்டா கூறினார்.