சந்திராயன் -3 வெற்றியைத் தொடர்ந்து, அழ்கடலில் உள்ள வளங்களை கண்டறியும் வகையில், சமுத்ராயன் என்ற பிரமாண்ட திட்டம் தயாராகி வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்துள்ள உத்தண்டி அருகே, கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது பேசிய அவர், கடலை ஆழ்பவர்கள் உலகையே ஆழ்வார்கள் என்று ஒரு பழிமொழி உண்டு. அதற்கு ஏற்ற வகையில் பாரதம் திகழ்ந்து வருகிறது. கன்ட்லா முதல் கோல்கட்டா வரை உலகத்தையே இணைக்க முடியும்.
தென்மாநிலத்தை ஆண்ட பல்லவர்கள் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியுள்ளனர். அந்த வகையில் சந்திரயான் -3 வெற்றியைத் தொடர்ந்து, சமுத்ரயான் திட்டம் தயாராகி வருகிறது.
ஆழ் கடலில், 6 மீட்டர் ஆழத்திற்கு, மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சி செய்ய, சமுத்ரயான் திட்டத்தை பாரதம் மேற்கொண்டுள்ளது.
கடந்த 2020 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2026 -ம் ஆண்டு நிறைவு பெறும் வகையில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை தயார் செய்து வருகிறது.
ஆழ் கடலில் உள்ள சூழல், பல்லுயிர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியுலகத்திற்கு தெரியாத தகவலை அது வெளிப்படுத்தும்.
இதற்காக, பிரத்தியேகமாக சமுத்ராயன் 6000 என்ற நீர்மூழ்கி கலனை, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கி உள்ளது. இது பாரதத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை என்றார்.
ஆழ்கடல் ஆராய்ச்சி நடத்துவதற்கு ஏதுவாக, இந்த வாகனத்தில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த நீர்மூழ்கி வாகனம் சோதனை கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுத்ராயன் கலனில், 3 பேர் ஆழ் கடலுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
இதன் மூலம், கடலின் ஆழமான ஆய்வுப் பணிகளை மேற்கொம்டுள்ள நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் மட்டுமே பெற்றுள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.