இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் டேவிட் வார்னர் 6 சிக்சர்கள் மற்றும் 5 பௌண்டரீஸ் என அடித்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்தை பறக்கவிட்ட டேவிட் வார்னர் 65 பந்துகளில் 81 ரன்களை அடித்து க்ளென் பந்தில் ஆட்டமிழந்தார்.
டிராவிஸ் ஹெட் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 பௌண்டரீஸ் மற்றும் 7 சிக்சர்கள் என அடித்து 67 பந்தில் 109 ரன்களுடன் க்ளென் பந்தில் ஆட்டமிழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதில் மிட்செல் மார்ஷ் 36 ரன்களிலும் ஸ்டீவ் ஸ்மித் 18 ரங்களிலும் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்ன்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க அப்போது ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 274/5 ஆகா இருந்தது.
இதைத் தொடர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்கினர். இதில் கிளென் மேக்ஸ்வெல் 5 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 24 பந்துகளில் 41 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் விளையாடி வந்த ஜோஷ் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 28 பந்துகளில் 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 4 சிக்சர்கள் மற்றும் 2 பௌண்டரீஸ் என 14 பந்துகளில் 37 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இதனால் 49.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 388 ரன்களை எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட் மற்றும் க்ளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்களும் மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்களும் ஜேம்ஸ் நீஷம் மற்றும் மாட் ஹென்றி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர்.
இதில் 7 வது ஓவரில் டெவோன் கான்வே 6 பௌண்டரீஸ் அடித்து 17 பந்துகளில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த 2 ஓவரிலேயே வில் யங் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து 37 பந்தில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து வந்த ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 9 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என 116 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய மிட்செல் 54 ரன்களும், நீசம் 58 ரன்களும் எடுத்து கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார் இவரின் அவுட் ஆல் நியூசிலாந்து அணி வெற்றியை தவறவிட்டது.
50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 383 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஆடம் சம்பா 3 விக்கெட்களும் ஜோ மற்றும் பாட் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது