குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலையால் பரபரப்பு!
Jun 15, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலையால் பரபரப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பலன்பூர் ஜெகத்னகா பகுதியைச் சேர்ந்தவர் கனுபாய் சோலங்கி. இவரது மனைவி ஷோபாபென். மகன் மணீஷ் சோலங்கி. இவரது மனைவி ரீட்டா. இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் மற்றும் 10 , 13 வயதில் 2 மகள்கள் இருந்தனர். மணீஷ் சோலங்கி பர்னிச்சர்கள் தயாரித்து விற்பனை செய்து வந்திருக்கிறார். இவரிடம் 35 தச்சர்களும் மற்றும் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மரக்கடையில் இருந்து ஒருவர் மணீஷ் சோலங்கியை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார். ஆனால், மணீஷ் தொடர்ந்து தொலைபேசி அழைப்பை ஏற்காததால், அந்த நபர் நேராக வீட்டிற்கு வந்திருக்கிறார். நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால், சந்தேகமடைந்த அவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குடும்பமே இறந்து கிடந்தது தெரியவந்தது. மணீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துகொண்டிருக்க, மற்றவர்கள் உயிரிழந்த நிலையில் கீழே இறந்து கிடந்தனர். உயிரிழந்த 7 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் மணீஷ் தந்தை, தாய், மனைவி 3 பேரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதும், மற்ற 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், காவல்துறை அந்த வீட்டிலிருந்து தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி இருக்கிறது. அக்கடிதத்தில், “வறுமை, பொருளாதார நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தோம்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனினும், இதுகுறித்து காவல்துறையினர் தீர விசாரித்து வருகின்றனர். இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “மணீஷ் மட்டுமே தற்கொலை செய்துகொண்டார் என்றே எங்களுக்குத் தகவல் வந்தது. இங்கு வந்த பிறகதான் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தற்கொலைக் குறிப்பை ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும்” என்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Gujratmass suicide
ShareTweetSendShare
Previous Post

போராடித் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி !

Next Post

ஆர்எஸ்எஸ் மூத்த பிரச்சாரகர் ஆர் ஹரி மறைவு !

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies