அயோத்தி இராமர் கோவில் சிற்ப வேலைப்பாடுகள்: வெளியிட்ட அறக்கட்டளை நிர்வாகம்!
Jul 25, 2025, 08:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில் சிற்ப வேலைப்பாடுகள்: வெளியிட்ட அறக்கட்டளை நிர்வாகம்!

Web Desk by Web Desk
Oct 29, 2023, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் ஸ்ரீராம ஜென்மபூமியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தொடர்பான புகைப்படங்களை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. இந்த சிற்ப வேலைப்பாடுகள் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

அயோத்தியில் இராம ஜென்மபூமியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இப்பணிகள் தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளன. 2024 ஜனவரி மாதம் பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடர்பான வீடியோவை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டிருந்தது. இக்காணொளி ஸ்ரீராம பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில்தான், ஸ்ரீராமர் கோவிலில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தொடர்பான புகைப்படங்களை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. இப்புகைப்படங்களை அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அறக்கட்டளை நிர்வாகம், “ஸ்ரீராம ஜென்மபூமி மந்திரில் உள்ள சிற்பங்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாகப் பேசிய அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், “2024 ஜனவரி 22-ம் தேதி கர்ப்பகிரகத்தில் ஸ்ரீராமர் சிலை நிறுவப்படும். சிலையை நிறுவுவதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்திருக்கிறோம். அவரும் எங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். எனவே, நிச்சயமாக ஜனவரி 22-ம் தேதி ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்” என்றார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஜெய் ஸ்ரீராம்! இன்று உணர்ச்சிகள் நிறைந்த நாள். ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள் என்னை சந்திக்க எனது இல்லத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, அயோத்திக்கு வருமாறு என்னை அழைத்தனர். நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனது வாழ்நாளில், இந்த வரலாற்று நிகழ்வைக் காண்பது எனது அதிர்ஷ்டம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Ramar TempleAyothyaPhotos
ShareTweetSendShare
Previous Post

கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டு வெடிப்பு!

Next Post

இதுவே இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies