அயோத்தி இராமர் கோவில் சிற்ப வேலைப்பாடுகள்: வெளியிட்ட அறக்கட்டளை நிர்வாகம்!
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில் சிற்ப வேலைப்பாடுகள்: வெளியிட்ட அறக்கட்டளை நிர்வாகம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 29, 2023, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் ஸ்ரீராம ஜென்மபூமியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தொடர்பான புகைப்படங்களை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. இந்த சிற்ப வேலைப்பாடுகள் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

அயோத்தியில் இராம ஜென்மபூமியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இப்பணிகள் தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளன. 2024 ஜனவரி மாதம் பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடர்பான வீடியோவை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டிருந்தது. இக்காணொளி ஸ்ரீராம பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில்தான், ஸ்ரீராமர் கோவிலில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தொடர்பான புகைப்படங்களை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. இப்புகைப்படங்களை அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அறக்கட்டளை நிர்வாகம், “ஸ்ரீராம ஜென்மபூமி மந்திரில் உள்ள சிற்பங்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாகப் பேசிய அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், “2024 ஜனவரி 22-ம் தேதி கர்ப்பகிரகத்தில் ஸ்ரீராமர் சிலை நிறுவப்படும். சிலையை நிறுவுவதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்திருக்கிறோம். அவரும் எங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். எனவே, நிச்சயமாக ஜனவரி 22-ம் தேதி ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்” என்றார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஜெய் ஸ்ரீராம்! இன்று உணர்ச்சிகள் நிறைந்த நாள். ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள் என்னை சந்திக்க எனது இல்லத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, அயோத்திக்கு வருமாறு என்னை அழைத்தனர். நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனது வாழ்நாளில், இந்த வரலாற்று நிகழ்வைக் காண்பது எனது அதிர்ஷ்டம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Ramar TempleAyothyaPhotos
ShareTweetSendShare
Previous Post

கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டு வெடிப்பு!

Next Post

இதுவே இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் !

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies