இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1414 பழங்கால சிலைகள்: அமெரிக்கா திருப்பி ஒப்படைப்பு!
Sep 9, 2025, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1414 பழங்கால சிலைகள்: அமெரிக்கா திருப்பி ஒப்படைப்பு!

Web Desk by Web Desk
Oct 30, 2023, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 105 பழங்கால சிலைகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பி ஒப்படைத்த அமெரிக்கா, தற்போது மீண்டும் 1,414 சிலைகளை திருப்பி ஒப்படைத்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம், சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ஐ.சி.ஐ.ஜே.) மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபைனான்ஸ் அன்கவர்டு ஆகியவை இணைந்து, தமிழகத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் சிலைக் கடத்தலை அம்பலப்படுத்தின.

இதையடுத்து, நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (மெட்) நிறுவனத்திற்கு எதிராக நியூயார்க் மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் மார்ச் 22-ம் தேதி தேடுதல் வாரண்ட் பிறப்பித்தது. அதில், பழங்கால பொருட்களை கைப்பற்ற அதிகாரிகளுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, மெட் நிறுவனம் மார்ச் 30-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 15 சிலைகளை இந்திய அரசாங்கத்துக்கு திருப்பி அனுப்புவதாகத் தெரிவித்திருந்தது. இதன் பிறகு, ஜூலை 17-ம் தேதி நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் 105 பழங்காலப் பொருட்கள் அமெரிக்க அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில்தான், தற்போது 1414 பழங்காலப் பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்திருக்கிறது.  அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, இப்பொருட்கள் ஏற்கெனவே நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

தற்போது, இந்திய தொல்லியல் துறையின் (ஏ.எஸ்.ஐ.) ஒரு குழு, அப்பொருட்களை சரிபார்ப்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது. இதன் பிறகு அப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் செயல்முறைகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், அமெரிக்காவிலிருந்து சுமார் 400 பழங்காலப் பொருட்களை இந்தியா திரும்பக் கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் தனது அமெரிக்கப் பயணத்தின்போது இப்பிரச்சனை குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்களை அமெரிக்க அரசாங்கம் திருப்பித் தர முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், எதிர்காலத்தில் பழங்கால பொருட்கள் கடத்தலை தடுக்கும் நோக்கில் இரு நாடுகளும் கலாசார சொத்துரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதேபோல, இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகளில், பல்வேறு நாடுகளுடனும் பழங்கால பொருட்களை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தங்களை இந்தியா தொடர்ந்து வருகிறது.

Tags: IndiaamericaStatue
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Related News

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies