இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1414 பழங்கால சிலைகள்: அமெரிக்கா திருப்பி ஒப்படைப்பு!
Sep 21, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1414 பழங்கால சிலைகள்: அமெரிக்கா திருப்பி ஒப்படைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 02:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 105 பழங்கால சிலைகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பி ஒப்படைத்த அமெரிக்கா, தற்போது மீண்டும் 1,414 சிலைகளை திருப்பி ஒப்படைத்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம், சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ஐ.சி.ஐ.ஜே.) மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபைனான்ஸ் அன்கவர்டு ஆகியவை இணைந்து, தமிழகத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் சிலைக் கடத்தலை அம்பலப்படுத்தின.

இதையடுத்து, நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (மெட்) நிறுவனத்திற்கு எதிராக நியூயார்க் மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் மார்ச் 22-ம் தேதி தேடுதல் வாரண்ட் பிறப்பித்தது. அதில், பழங்கால பொருட்களை கைப்பற்ற அதிகாரிகளுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, மெட் நிறுவனம் மார்ச் 30-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 15 சிலைகளை இந்திய அரசாங்கத்துக்கு திருப்பி அனுப்புவதாகத் தெரிவித்திருந்தது. இதன் பிறகு, ஜூலை 17-ம் தேதி நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் 105 பழங்காலப் பொருட்கள் அமெரிக்க அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில்தான், தற்போது 1414 பழங்காலப் பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்திருக்கிறது.  அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, இப்பொருட்கள் ஏற்கெனவே நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

தற்போது, இந்திய தொல்லியல் துறையின் (ஏ.எஸ்.ஐ.) ஒரு குழு, அப்பொருட்களை சரிபார்ப்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது. இதன் பிறகு அப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் செயல்முறைகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், அமெரிக்காவிலிருந்து சுமார் 400 பழங்காலப் பொருட்களை இந்தியா திரும்பக் கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் தனது அமெரிக்கப் பயணத்தின்போது இப்பிரச்சனை குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்களை அமெரிக்க அரசாங்கம் திருப்பித் தர முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், எதிர்காலத்தில் பழங்கால பொருட்கள் கடத்தலை தடுக்கும் நோக்கில் இரு நாடுகளும் கலாசார சொத்துரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதேபோல, இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகளில், பல்வேறு நாடுகளுடனும் பழங்கால பொருட்களை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தங்களை இந்தியா தொடர்ந்து வருகிறது.

Tags: americaStatueIndia
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies