இந்தியாவின் யுபிஐ: உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணி
Jul 23, 2025, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் யுபிஐ: உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணி

Web Desk by Web Desk
Oct 30, 2023, 08:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

இந்தியாவின் யுபிஐ உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணியில் உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய தலைப்புச் செய்திகளில், இந்திய புத்தாக்கம் இடம் பெற்றிருந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி யுபிஐ கட்டண முறையாகத்தான் இருக்கும். இன்று, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணப்பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. யுபிஐ முறையை 30 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் மற்றும் 5 கோடிக்கும் அதிகமான வணிகர்கள் பயன்படுத்துகின்றனர்.

தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யுபிஐ பயன்படுத்தப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு தரவுகளின்படி இன்று, உலகின் அனைத்து நாடுகளிலும், கிட்டத்தட்ட 46 சதவீதம் பங்கைக் கொண்டு, அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பிரேசில், சீனா, தாய்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. 2016-இல் ஒரு மில்லியன் ஆக இருந்த யுபிஐ பரிவர்த்தனைகள், இப்போது 10 பில்லியன் (1,000 கோடிகள்) பரிவர்த்தனைகளைத் தாண்டியுள்ளது.

யுபிஐயின் வளர்ச்சியானது குறிப்பிடத்தக்க வகையில், பணம் செலுத்துவதற்கான பணப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், பிற டிஜிட்டல் கட்டண முறைகளுக்கும் மாற்றாக உள்ளது. உதாரணமாக, பணம் செலுத்துவதற்கான டெபிட் கார்டுகளின் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. யுபிஐ தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருவதால், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இது இன்னும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.

டிஜிட்டல் கட்டண முறையின் வெற்றியானது, டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பின் வலிமையில் மட்டுமல்லாமல், ரொக்கப் பணத்திலிருந்து டிஜிட்டலுக்கு மாறுவதற்கு மக்களை ஊக்குவித்த நடத்தைத் தூண்டுதலிலும் பிரதிபலிக்கிறது.

கட்டணம் செலுத்தும் செயலிகளால் வழங்கப்படும் சிறிய குரல் பெட்டிகள் போன்ற சிறிய மற்றும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் இதில் அடங்கும், இதில் க்யூஆர் குறியீடு மூலம் ஒவ்வொரு முறையும் எவ்வளவு பணம் உடனடியாகப் பெறப்பட்டது என்பதை குரல் தெரிவிக்கிறது. இது சிறு வணிகர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் மத்தியில் நீண்ட காலமாக ரொக்கப் பணப் பரிவர்த்தனையால் ஏற்படும் அவநம்பிக்கையைப் போக்க உதவியுள்ளது.

இந்தியாவின் வலுவான டிஜிட்டல் கட்டணச் சூழல் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. யுபிஐயின் உள்ளூர் வெற்றியைத் தொடர்ந்து, நாட்டிற்கு வெளியே பணம் செலுத்தும் முறையை எடுத்துச் செல்ல, 2020-ஆம் ஆண்டில் இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் என்ற ஒரு பிரிவை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அமைத்தது. அப்போதிருந்து, என்ஐபிஎல் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகளை விரிவுபடுத்த 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

சமீபத்திய காலங்களில், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகியவை யுபிஐ பரிமாற்ற அலைவரிசையில் இணைந்துள்ளன. பிரான்சில் யுபிஐ இன் நுழைவு குறிப்பிடத்தக்கது, இது முதல் முறையாக ஐரோப்பாவில் காலூன்ற உதவுகிறது. இப்போது ஆறு புதிய உறுப்பு நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் குழுவில் யுபிஐயின் விரிவாக்கத்திற்கு பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.

2016 இல் ஒரு சாதாரண தொடக்கத்தில் இருந்து, யுபிஐ தற்போது அடைந்துள்ள அற்புதமான வெற்றியின் அளவுக்கும் தாக்கத்துக்கும் ஒப்பீடே இல்லை என்பதே உண்மை.

Tags: Indiaupi
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல்: காட்டு யானை சுட்டுக்கொலை – வேட்டை கும்பல் அட்டூழியம்

Next Post

மத்திய அரசுத் திட்டங்களை சீர்குலைக்க முயலும் கேரளா: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

Related News

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

மத்திய பிரதேசம் : கிணற்றில் விழுந்த புலி பத்திரமாக மீட்பு!

மருத்துவமனையில் இருந்தபடி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies