மத்திய அரசுத் திட்டங்களை சீர்குலைக்க முயலும் கேரளா: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!
Aug 8, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசுத் திட்டங்களை சீர்குலைக்க முயலும் கேரளா: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 08:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசின் திட்டங்களை கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டி இருக்கிறார்.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய அமைப்புகள் பேரணி நடத்தின. இப்பேரணியில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் மஷால் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது, இந்து மற்றும் யூத மதங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய மஷால், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும்படி பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரி என்கிற இடத்தில், யெகோவாவின் சாட்சிகள் என்கிற கிறிஸ்தவ அமைப்பு மாநாடு நடத்தியது. இதன் நிறைவு நாள் பிரார்த்தனையின்போது, 3 இடங்களில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 2 பெண்கள், 1 சிறுமி என 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 45-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், கேரளாவில் தீவிரவாத சக்திகள் தலைதூக்கி வருவதாகக் குற்றம்சாட்டி, அம்மாநில தலைமைச் செயலகத்தை பா.ஜ.க.வினர் இன்று முற்றுகையிட்டனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசுகையில், “ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 70 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார். ஆனால், பினராயி விஜயன் அரசால் 12 லட்சம் குழாய் இணைப்புகளை மட்டுமே வழங்க முடிந்தது.

அதேபோல, ஆறு வழிச்சாலை அமைக்க உள்ள என்.ஹெச்.-66 திட்டத்திற்கு பிரதமர் மோடி அனுமதி அளித்திருக்கிறார். ஆனால், தற்போதைய அரசு நிலம் தராமல் தடைகளை ஏற்படுத்த முயல்கிறது. மது அருந்துவதை அதிகரிப்பதில் கேரள அரசு ஈடுபட்டிருக்கிறது. சட்டவிரோத மது விநியோகத்தை தடுக்க இங்கு வந்திருக்கிறோம். மேலும், மத்திய அரசின் திட்டங்களை கேரள அரசு சீர்குலைக்க முயற்சிக்கிறது.

கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் ஹமாஸ் தலைவர் ஒருவர் உரையாற்றிய போது, இடதுசாரி அரசு அமைதியாக வேடிக்கை பார்த்தது. நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தபோதும் அமைதி காக்கிறது. பா.ஜ.க. சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நாங்கள் அனைவருக்கும் சமம். அதேநேரம், தேசம் என்ற போர்வையில் நாட்டைப் பிரிக்க முயற்சிக்கும் தேசவிரோத சக்திகளுடன் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்.

பினராயி விஜயனின் அரசாங்கத்தில் உள்ள தவறான நிர்வாகப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், தற்போதைய நிர்வாகத்தில் நிலவும் ஊழல்கள் மற்றும் ஊழலுக்கு தீர்வு காண்பதற்கும் நாங்கள் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். கேரளாவில் செழிப்பு, வளர்ச்சி மற்றும் நல்லாட்சியைக் கொண்டுவருவதற்கான எங்கள் முயற்சிகளில் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே எங்கள் கூட்டு இலக்கு” என்றார்.

Tags: Keralabjp protestJ.P.Nadda
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் யுபிஐ: உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணி

Next Post

திருப்பதி: நவம்பர் மாத உற்சவ விவரங்கள் அறிவிப்பு

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies