மத்திய அரசுத் திட்டங்களை சீர்குலைக்க முயலும் கேரளா: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!
May 9, 2026, 11:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசுத் திட்டங்களை சீர்குலைக்க முயலும் கேரளா: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 08:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் திட்டங்களை கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டி இருக்கிறார்.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய அமைப்புகள் பேரணி நடத்தின. இப்பேரணியில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் மஷால் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது, இந்து மற்றும் யூத மதங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய மஷால், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும்படி பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரி என்கிற இடத்தில், யெகோவாவின் சாட்சிகள் என்கிற கிறிஸ்தவ அமைப்பு மாநாடு நடத்தியது. இதன் நிறைவு நாள் பிரார்த்தனையின்போது, 3 இடங்களில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 2 பெண்கள், 1 சிறுமி என 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 45-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், கேரளாவில் தீவிரவாத சக்திகள் தலைதூக்கி வருவதாகக் குற்றம்சாட்டி, அம்மாநில தலைமைச் செயலகத்தை பா.ஜ.க.வினர் இன்று முற்றுகையிட்டனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசுகையில், “ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 70 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார். ஆனால், பினராயி விஜயன் அரசால் 12 லட்சம் குழாய் இணைப்புகளை மட்டுமே வழங்க முடிந்தது.

அதேபோல, ஆறு வழிச்சாலை அமைக்க உள்ள என்.ஹெச்.-66 திட்டத்திற்கு பிரதமர் மோடி அனுமதி அளித்திருக்கிறார். ஆனால், தற்போதைய அரசு நிலம் தராமல் தடைகளை ஏற்படுத்த முயல்கிறது. மது அருந்துவதை அதிகரிப்பதில் கேரள அரசு ஈடுபட்டிருக்கிறது. சட்டவிரோத மது விநியோகத்தை தடுக்க இங்கு வந்திருக்கிறோம். மேலும், மத்திய அரசின் திட்டங்களை கேரள அரசு சீர்குலைக்க முயற்சிக்கிறது.

கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் ஹமாஸ் தலைவர் ஒருவர் உரையாற்றிய போது, இடதுசாரி அரசு அமைதியாக வேடிக்கை பார்த்தது. நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தபோதும் அமைதி காக்கிறது. பா.ஜ.க. சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நாங்கள் அனைவருக்கும் சமம். அதேநேரம், தேசம் என்ற போர்வையில் நாட்டைப் பிரிக்க முயற்சிக்கும் தேசவிரோத சக்திகளுடன் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்.

பினராயி விஜயனின் அரசாங்கத்தில் உள்ள தவறான நிர்வாகப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், தற்போதைய நிர்வாகத்தில் நிலவும் ஊழல்கள் மற்றும் ஊழலுக்கு தீர்வு காண்பதற்கும் நாங்கள் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். கேரளாவில் செழிப்பு, வளர்ச்சி மற்றும் நல்லாட்சியைக் கொண்டுவருவதற்கான எங்கள் முயற்சிகளில் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே எங்கள் கூட்டு இலக்கு” என்றார்.

Tags: Keralabjp protestJ.P.Nadda
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் யுபிஐ: உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணி

Next Post

திருப்பதி: நவம்பர் மாத உற்சவ விவரங்கள் அறிவிப்பு

Related News

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

Load More

அண்மைச் செய்திகள்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies