திமுக அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர்கள் 300 பேர் கொலை வெறி தாக்குதல்!
Oct 2, 2025, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர்கள் 300 பேர் கொலை வெறி தாக்குதல்!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகுந்து பாஜக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், டிஎஸ்பி, போலீசார் என சகல தரப்பினர் மீதும் திமுக அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர்கள் 300 பேர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரில் ஒரு குவாரிக்கு தலா ரூ. 2 கோடி என 31 கல் குவாரிகளுக்கான ஏலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் டெண்டர் பெட்டி வைக்கப்பட்டது. ஆனால், செங்குணம், கல்மாடி, பாடாலுார், திருவளக்குறிச்சி உள்ளிட்ட 21 குவாரிகளை, திமுக எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஆகியோர், அதிகாரிகள் துணையோடு பிளாக் செய்துவிட்டனர்.

இதனால், குவாரியை ஏலம் எடுக்க விரும்புபவர்கள், கட்சி நிதியாக 25 முதல் 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். இது தவிர, அரசுக்குக்கு கட்ட வேண்டிய ஒப்பந்தப்புள்ளி தொகையை, டி.டி.,யாக எடுத்துக் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.

இந்நிலையில், பாஜக கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், அவரது தம்பி முருகேசன் உள்ளிட்டோர் கல் குவாரி ஏலம் எடுக்க போலீசார் உதவியுடன் பெட்டியில் விண்ணப்பம் போட முயன்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரன் உதவியாளர் மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனின் பி.ஏ. சிவசங்கர் உள்ளிட்டோர் விண்ணப்பத்தைப் பறித்துக் கிழித்தெறிந்தனர். பாஜக நிர்வாகிகளான கலைச்செல்வன், முருகேசன் மற்றும் கனிம வரித்துறை துணை இயக்குநர் ஜெயபால், வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன், உதவி புவியியலாளர் இளங்கோவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். டி.எஸ்.பி., பழனிசாமியைக் கீழே தள்ளி விட்டனர். அலுவலத்தில் உள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர்.

பாஜக பிரமுகர்கள் 3 பேரும், கலெக்டர் அலுவலக பார்வையாளர் அறையில் தஞ்சம் புகுந்தனர். ஆனாலும், விடாமல் துரத்திச் சென்று முருகேசனின் பேண்டை உருவிவிட்டு, போலீசார் முன்னிலையில் தாக்கினர். இதைப் படம் பிடித்த வீடியோ, போட்டோ கிராபர், செய்தியாளர்களை சரமாகியாக தாக்கினர். இதில், சத்தியம் தொலைக்காட்சி நிருபர் மாரியப்பனின் செல்போன் பறிக்கப்பட்டது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதிகாரிகள், பெண் அலுவலர்கள் கதவைச் சாத்திக் கொண்டு பயத்தில் நடுங்கினர். இதனால், கலெக்டர் அலுவலகமே போர்க்களமானது.

திமுகவினரின் இந்த கொலை தாக்குதலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags: bjpdmk fails
ShareTweetSendShare
Previous Post

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

Next Post

பாகிஸ்தான் அரசு விடுத்த புதிய எச்சரிக்கை!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies