பள்ளியில் மலக்கழிவு - மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!
Nov 16, 2025, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளியில் மலக்கழிவு – மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அருகே காவேரிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் அறையில் மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே காவேரிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடம் கடந்த 1950 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தப் பள்ளியைச் சுற்றி மதில் சுவர் கட்டாமல் வெட்டவெளியாக உள்ளதால், பள்ளி விடுமுறை தினங்களில் சமூக விரோதிகள் சிலர் இங்கு வந்து மதுபானம் குடித்துச் செல்வது மற்றும் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்கள் யாரும் பள்ளி பக்கம் செல்லவில்லை. அதேபோல ஆசிரியர்களும் பள்ளி பக்கம் போகவில்லை.

இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கும் சமையலறை சுவரில் மர்ம நபர்கள் மனிதக்கழிவை பூசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று காலை சமையலறைக்கு வழக்கம் போல் சென்ற ஊழியர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் மாலை 3 மணி வரை பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தவில்லை.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளியின் சமையலறை சுவரில் மனிதக்கழிவு பூசிவிட்டுச் சென்ற மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கையில், தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தனர். அதில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதேபோல, தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள ஒரு பள்ளியில் தண்ணீர் தொட்டி அருகே மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திமுக அரசு திணறி வருவதால், குற்றவாளிகள் தைரியமாகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில், ஏற்கனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது, பள்ளி குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் குறி வைக்கப்பட்டு அங்கு மலம் கலப்பது தொடர்கதையாகி வருகிறது.

Tags: metur school
ShareTweetSendShare
Previous Post

இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!

Next Post

டெங்கு காய்ச்சல்: கடைசி நேர சிகிச்சை – இருவர் பலி!

Related News

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies