பள்ளியில் மலக்கழிவு - மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!
Mar 15, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளியில் மலக்கழிவு – மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அருகே காவேரிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் அறையில் மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே காவேரிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடம் கடந்த 1950 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தப் பள்ளியைச் சுற்றி மதில் சுவர் கட்டாமல் வெட்டவெளியாக உள்ளதால், பள்ளி விடுமுறை தினங்களில் சமூக விரோதிகள் சிலர் இங்கு வந்து மதுபானம் குடித்துச் செல்வது மற்றும் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்கள் யாரும் பள்ளி பக்கம் செல்லவில்லை. அதேபோல ஆசிரியர்களும் பள்ளி பக்கம் போகவில்லை.

இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கும் சமையலறை சுவரில் மர்ம நபர்கள் மனிதக்கழிவை பூசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று காலை சமையலறைக்கு வழக்கம் போல் சென்ற ஊழியர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் மாலை 3 மணி வரை பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தவில்லை.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளியின் சமையலறை சுவரில் மனிதக்கழிவு பூசிவிட்டுச் சென்ற மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கையில், தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தனர். அதில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதேபோல, தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள ஒரு பள்ளியில் தண்ணீர் தொட்டி அருகே மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திமுக அரசு திணறி வருவதால், குற்றவாளிகள் தைரியமாகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில், ஏற்கனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது, பள்ளி குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் குறி வைக்கப்பட்டு அங்கு மலம் கலப்பது தொடர்கதையாகி வருகிறது.

Tags: metur school
ShareTweetSendShare
Previous Post

இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!

Next Post

டெங்கு காய்ச்சல்: கடைசி நேர சிகிச்சை – இருவர் பலி!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies