பள்ளியில் மலக்கழிவு - மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!
Oct 2, 2025, 05:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளியில் மலக்கழிவு – மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அருகே காவேரிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் அறையில் மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே காவேரிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடம் கடந்த 1950 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தப் பள்ளியைச் சுற்றி மதில் சுவர் கட்டாமல் வெட்டவெளியாக உள்ளதால், பள்ளி விடுமுறை தினங்களில் சமூக விரோதிகள் சிலர் இங்கு வந்து மதுபானம் குடித்துச் செல்வது மற்றும் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்கள் யாரும் பள்ளி பக்கம் செல்லவில்லை. அதேபோல ஆசிரியர்களும் பள்ளி பக்கம் போகவில்லை.

இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கும் சமையலறை சுவரில் மர்ம நபர்கள் மனிதக்கழிவை பூசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று காலை சமையலறைக்கு வழக்கம் போல் சென்ற ஊழியர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் மாலை 3 மணி வரை பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தவில்லை.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளியின் சமையலறை சுவரில் மனிதக்கழிவு பூசிவிட்டுச் சென்ற மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கையில், தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தனர். அதில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதேபோல, தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள ஒரு பள்ளியில் தண்ணீர் தொட்டி அருகே மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திமுக அரசு திணறி வருவதால், குற்றவாளிகள் தைரியமாகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில், ஏற்கனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது, பள்ளி குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் குறி வைக்கப்பட்டு அங்கு மலம் கலப்பது தொடர்கதையாகி வருகிறது.

Tags: metur school
ShareTweetSendShare
Previous Post

இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!

Next Post

டெங்கு காய்ச்சல்: கடைசி நேர சிகிச்சை – இருவர் பலி!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies