பள்ளியில் மலக்கழிவு - மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!
Jun 14, 2026, 05:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளியில் மலக்கழிவு – மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அருகே காவேரிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் அறையில் மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே காவேரிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடம் கடந்த 1950 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தப் பள்ளியைச் சுற்றி மதில் சுவர் கட்டாமல் வெட்டவெளியாக உள்ளதால், பள்ளி விடுமுறை தினங்களில் சமூக விரோதிகள் சிலர் இங்கு வந்து மதுபானம் குடித்துச் செல்வது மற்றும் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்கள் யாரும் பள்ளி பக்கம் செல்லவில்லை. அதேபோல ஆசிரியர்களும் பள்ளி பக்கம் போகவில்லை.

இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கும் சமையலறை சுவரில் மர்ம நபர்கள் மனிதக்கழிவை பூசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று காலை சமையலறைக்கு வழக்கம் போல் சென்ற ஊழியர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் மாலை 3 மணி வரை பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தவில்லை.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளியின் சமையலறை சுவரில் மனிதக்கழிவு பூசிவிட்டுச் சென்ற மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கையில், தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தனர். அதில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதேபோல, தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள ஒரு பள்ளியில் தண்ணீர் தொட்டி அருகே மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திமுக அரசு திணறி வருவதால், குற்றவாளிகள் தைரியமாகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில், ஏற்கனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது, பள்ளி குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் குறி வைக்கப்பட்டு அங்கு மலம் கலப்பது தொடர்கதையாகி வருகிறது.

Tags: metur school
ShareTweetSendShare
Previous Post

இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!

Next Post

டெங்கு காய்ச்சல்: கடைசி நேர சிகிச்சை – இருவர் பலி!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies