இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!
Apr 29, 2026, 11:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-வங்கதேசம் இரயில் சேவை: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, ஷேக் ஹசீனா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நாளை தொடங்கி வைக்கிறார்கள்.

இந்தியாவுக்கும் அண்டை நாடான வங்கதேசத்துக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இதை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையிலும், இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 15 கி.மீ. தொலைவுக்கு இரயில் பாதை அமைக்கப்பட்டு இரயில் சேவை தொடங்கப்படவிருக்கிறது.

இந்த இரயிலுக்கு அகர்தலா-அகவுரா எல்லை தாண்டிய இணைப்பு இரயில் சேவை என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த இரயில் பாதை 5 கி.மீ. தூரம் இந்தியாவிலும், 10 கி.மீ. தூரம் வங்கதேசத்திலும் இடம்பெறுகிறது. இந்த இரயில் சேவை, இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலா நகரிலிருந்து டாக்கா வழியாக வங்கதேசத்தின் அகவுரா நகர் வரை செல்கிறது.

இந்த இரயில் இடையில் இரு நாட்டு எல்லைப்பகுதியில் புதிதாக அமைப்பட்டுள்ள நிஸ்சிந்தாபூர் சர்வதேச குடியேற்ற மைய இரயில் நிலையத்திலும் நின்று செல்லும். அங்கு பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்படும். மேலும், இந்த இரயில் பாதை வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக திரிபுரா, அஸ்ஸாம், மிசோரம் ஆகிய மாநிலங்கள் வழியாக கொல்கத்தா செல்லவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரயில் பாதையில் 1 பெரிய பாலமும், 3 சிறிய பாலங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. இதற்கான சோதனை இரயில் ஓட்டம் நேற்று நடைபெற்றது. தற்போது கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்குச் செல்ல 31 மணி நேரமாகிறது. இந்த இரயில் பாதைத் திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் பயண நேரம் 10 மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரயில் பாதை திட்டத்துக்காக இந்திய இரயில்வே தனது பங்காக இதுவரை 154 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது. இந்த இரயில் சேவையை நாளை பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி மூலமாக காலை 11 மணியளவில் தொடங்கி வைக்கின்றனர்.

Tags: PM ModitrainIndia-Bangladesh
ShareTweetSendShare
Previous Post

அமர் பிரசாத் ரெட்டிக்கு 3 -ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

Next Post

பள்ளியில் மலக்கழிவு – மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies