சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை!
Feb 6, 2026, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பிறகு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து வெளியேவந்தார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான  சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் விதித்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அக்டோபர் 18 அன்று நாயுடுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் அவரை ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.

சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி, ஆந்திர உயர்நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு நவம்பர் 24ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இதனால் நவம்பர் 24ம் தேதி சந்திரபாபு நாயுடு மீண்டும் சரணடைய உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 10ம் தேதி முக்கிய ஜாமீன் மனு மீதான வாதங்களை நீதிமன்றம் விசாரிக்கும். மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊடகங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தற்போது 53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பிறகு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, வெளியே வந்தார். தனக்கு அதரவு அளித்த அனைவருக்கும் சந்திரபாபு நாயுடு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.  தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags: chandrababu naiduAndra Pradesh
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 205 ரன்கள் இலக்கு!

Next Post

ஹமாஸ் பிடியிலிருந்து இஸ்ரேல் பெண் வீரர் மீட்பு!

Related News

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை!

செஷல்ஷ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் சிம்ஸ் மருத்துவக்குழு!

சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார்!

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நடுக்கடலில் மயக்கமடைந்த மீனவரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் – எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!

பரவி வரும் பறவைக்காய்ச்சல், பொதுமக்களுக்கு கவனம் தேவை – நயினார் நாகேந்திரன்

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை பிறப்பித்த அபாரதம் செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திர திருவிழா கோலாகலம்!

இஸ்லாமாபாத்தை கைவிட்ட டிரம்ப் – இந்தியா – அமெரிக்கா டீலால் பெரும் பின்னடைவு!

மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

தொழில் போட்டி காரணமாக சேலத்தில் பானிபூரி விற்ற 14 வயது சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

ஈரானில் போர் பதற்றம் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies