ஹமாஸ் பிடியிலிருந்து இஸ்ரேல் பெண் வீரர் மீட்பு!
Jun 22, 2026, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் பிடியிலிருந்து இஸ்ரேல் பெண் வீரர் மீட்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற இஸ்ரேல் இராணுவத்தின் பெண் வீரரை, அந்நாட்டு இராணுவ வீரர்கள் மீட்டிருக்கிறார்கள்.

காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மேலும், வெளிநாட்டினர் மற்றும் இஸ்ரேலியர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டினர் சிலரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. 25-வது நாளாகத் தொடரும் இத்தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 8,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி இருக்கிறார்கள். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், தீவிரவாதத் தலைவர்களின் வீடுகள் ஆகியவற்றையும் இஸ்ரேல் தரைமட்டமாக்கி இருக்கிறது. முதலில் வான்வழித் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்டு வந்த இஸ்ரேல் தற்போது தரை வழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கிறது.

இஸ்ரேலின் டாங்கிகள் காஸா நகரின் மையப்பகுதி வரை சென்று தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காலாட் படை வீரர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளை தேடித் தேடி வேட்டையாடி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில்தான் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதியாகப் பிடித்துச் சென்ற ஓரி மெகதீஷ் என்கிற இஸ்ரேல் நாட்டின் பெண் இராணுவ வீரரை, இஸ்ரேல் இராணுவம் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதோடு, அந்த பெண் வீரர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது. மேலும், அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

Tags: HamasIsaraelLady soldierrecover
ShareTweetSendShare
Previous Post

சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை!

Next Post

சிங்கூர் டாடா வழக்கு – மம்தா அரசு 766 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

Related News

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies