சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை!
May 11, 2026, 12:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பிறகு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து வெளியேவந்தார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான  சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் விதித்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அக்டோபர் 18 அன்று நாயுடுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் அவரை ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.

சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி, ஆந்திர உயர்நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு நவம்பர் 24ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இதனால் நவம்பர் 24ம் தேதி சந்திரபாபு நாயுடு மீண்டும் சரணடைய உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 10ம் தேதி முக்கிய ஜாமீன் மனு மீதான வாதங்களை நீதிமன்றம் விசாரிக்கும். மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊடகங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தற்போது 53 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பிறகு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, வெளியே வந்தார். தனக்கு அதரவு அளித்த அனைவருக்கும் சந்திரபாபு நாயுடு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.  தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags: chandrababu naiduAndra Pradesh
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 205 ரன்கள் இலக்கு!

Next Post

ஹமாஸ் பிடியிலிருந்து இஸ்ரேல் பெண் வீரர் மீட்பு!

Related News

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

எஸ்.பி வேலுமணி தலைமையில் தனி அணி ?; தீவிர ஆலோசனை

திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஜோசப் விஜய்

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழகத்தின் கடன் உள்ளது – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக பதவியேற்றார் விஜய் – ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies