கோழிக்கோடு, குவாலியருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!
Jul 23, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோழிக்கோடு, குவாலியருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!

Web Desk by Web Desk
Nov 1, 2023, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுனெஸ்கோவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் கேரளாவின் கோழிக்கோடும், மத்தியப் பிரதேசத்தின் குவாலியரும் இணைந்திருப்பதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமித்ஷா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு, உலகின் சிறந்த 55 நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ வெளியிட்டிருக்கிறது. இதில் கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு நகரமும், மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் நகரமும் இடம் பிடித்திருக்கின்றன. இதற்கு பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டீஸ் பட்டியலில் இணைந்திருப்பதின் மூலம், இந்தியாவின் கலாச்சாரம், கோழிக்கோட்டின் வளமான இலக்கிய மரபு மற்றும் குவாலியரின் மெல்லிசை பாரம்பரியம் ஆகியவை உலகளாவிய அரங்கில் பிரகாசமாக ஒளிர்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக கோழிக்கோடு மற்றும் குவாலியர் மக்களுக்கு வாழ்த்துகள்!

இந்த சர்வதேச அங்கீகாரத்தை நாம் கொண்டாடும் வேளையில், நமது பன்முக கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை நமது நாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த பாராட்டுக்கள் நமது தனித்துவமான கலாச்சார கதைகளை வளர்ப்பதற்கும் பகிர்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபரின் கூட்டு முயற்சிகளையும் பிரதிபலிக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.

India's cultural vibrancy shines brighter on the global stage with Kozhikode's rich literary legacy and Gwalior's melodious heritage now joining the esteemed UNESCO Creative Cities Network.

Congratulations to the people of Kozhikode and Gwalior on this remarkable achievement!… https://t.co/JgxRIDp20w

— Narendra Modi (@narendramodi) November 1, 2023

அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டீஸ் பட்டியலில் குவாலியரும் கோழிக்கோடும் இணைந்திருப்பது நமது தேசத்திற்கு மற்றொரு மகிழ்ச்சியான தருணம். குவாலியரின் புகழ்பெற்ற இசை பாரம்பரியத்தை கவனத்தில் கொண்டு, இந்த நகரம் ‘இசை நகரமாக’ நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவின் கோழிக்கோடு ‘இலக்கிய நகரம்’ என்று யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நமது படைப்பாற்றலுக்கான உலகளாவிய இந்த அங்கீகாரம், நமது கவிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் படைப்புத் தேடலைப் புதுப்பிக்கும் அதேவேளையில் நமது கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்தும்” என்று தெரிவித்திருக்கிறார்.

It is another moment of elation for our nation as Gwalior and Kozhikode have been included in @UNESCO's Creative Cities Network.

Taking note of Gwalior's glorious heritage of music, the city has been designated as the 'City of Music' and Kozhikode in Kerala as the 'City of… https://t.co/3hnrjg5gBL

— Amit Shah (@AmitShah) November 1, 2023

 

Tags: PM ModiAmitshaunescoGreetings
ShareTweetSendShare
Previous Post

பிரதமருடன் புகைப்படம் : மகிழ்ச்சியின் உச்சியில் வீரர்கள் !

Next Post

பிரதமர் விளையாட்டை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக உள்ளது – சுமித் !

Related News

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies