உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்த முன்னோர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!
Mar 15, 2026, 12:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்த முன்னோர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 3, 2023, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் நிலையான உணவுக் கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. நமது முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்துள்ளனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் ‘உலக உணவு இந்தியா 2023’ என்கிற மெகா உணவுக் கண்காட்சியை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் விவசாயிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கும். கடந்த 9 ஆண்டுகளில், உணவு பதப்படுத்தும் துறைக்கு 50,000 கோடி அன்னிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ.) கிடைத்துள்ளது.

உணவு பதப்படுத்தும் ஒவ்வொரு துறையிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. நாட்டின் உணவுப் பன்முகத்தன்மை உலக முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாகும். இந்தியாவின் நிலையான உணவுக் கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. நமது முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்துள்ளனர். உணவு பதப்படுத்தும் தொழிலை வழிநடத்தும் இயற்கையான திறனுக்காக இந்தியாவில் உள்ள பெண்களை பாராட்டுகிறேன்.

2023-ம் ஆண்டு சர்வதேசத் தினை ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. தினை நமது ‘சூப்பர்ஃபுட் வரிசையில்’ முக்கிய அங்கமாகும். உணவு வீணாவதைத் தடுக்கும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இது நிலையான வாழ்க்கை முறையின் நோக்கத்தை அடைவதில் குறிப்பிடத்தக்க முயற்சியாகும். இந்தியாவின் முதலீட்டாளர் நட்புக் கொள்கைகள் நாட்டின் உணவுத் துறையை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்கின்றன” என்றார்.

நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பசுபதி குமார் பராஸ், பிரஹலாத் சிங் படேல் மற்றும் பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் கலந்து கொண்டனர். ‘உலக உணவு இந்தியா 2023’ நிகழ்வு, இந்தியாவை உலகின் உணவுச் சந்தையாகக் காட்டுவதையும், 2023-ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாகக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது அரசாங்க அமைப்புகள், தொழில் வல்லுநர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு விவாதங்களில் ஈடுபடுவதற்கும், கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதற்கும், விவசாய உணவுத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கும், நெட்வொர்க்கிங் மற்றும் வணிக தளத்தை வழங்கும்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய உணவு பதப்படுத்தும் துறையின் புதுமை மற்றும் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உணவு பதப்படுத்தும் தொழில்துறையின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு 48 அமர்வுகள் நடத்தப்படுகிறது. இது தவிர, நிதி வலுவூட்டல், தர உத்தரவாதம் மற்றும் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமைகளையும் வலியுறுத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் முக்கிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் உட்பட 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வெளிநாட்டு வாங்குபவர்களுடன், விற்பனையாளர் சந்திப்பும் இடம்பெறுகிறது. இந்நிகழ்வில், நெதர்லாந்து கூட்டாளி நாடாக செயல்படும் நிலையில், ஜப்பான் நிகழ்வின் முக்கிய நாடாக இருக்கிறது.

Tags: PM ModidelhiInaguratesWorld Food India 2023
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் எ.வ.வேலுவின் பினாமியான கரூர் பத்மா வீட்டில் ஜ.டி. ரெய்டு!

Next Post

மக்களே உஷார்!: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies