உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்த முன்னோர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 12, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்த முன்னோர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 3, 2023, 02:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் நிலையான உணவுக் கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. நமது முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்துள்ளனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் ‘உலக உணவு இந்தியா 2023’ என்கிற மெகா உணவுக் கண்காட்சியை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் விவசாயிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கும். கடந்த 9 ஆண்டுகளில், உணவு பதப்படுத்தும் துறைக்கு 50,000 கோடி அன்னிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ.) கிடைத்துள்ளது.

உணவு பதப்படுத்தும் ஒவ்வொரு துறையிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. நாட்டின் உணவுப் பன்முகத்தன்மை உலக முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாகும். இந்தியாவின் நிலையான உணவுக் கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. நமது முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்துள்ளனர். உணவு பதப்படுத்தும் தொழிலை வழிநடத்தும் இயற்கையான திறனுக்காக இந்தியாவில் உள்ள பெண்களை பாராட்டுகிறேன்.

2023-ம் ஆண்டு சர்வதேசத் தினை ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. தினை நமது ‘சூப்பர்ஃபுட் வரிசையில்’ முக்கிய அங்கமாகும். உணவு வீணாவதைத் தடுக்கும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இது நிலையான வாழ்க்கை முறையின் நோக்கத்தை அடைவதில் குறிப்பிடத்தக்க முயற்சியாகும். இந்தியாவின் முதலீட்டாளர் நட்புக் கொள்கைகள் நாட்டின் உணவுத் துறையை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்கின்றன” என்றார்.

நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பசுபதி குமார் பராஸ், பிரஹலாத் சிங் படேல் மற்றும் பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் கலந்து கொண்டனர். ‘உலக உணவு இந்தியா 2023’ நிகழ்வு, இந்தியாவை உலகின் உணவுச் சந்தையாகக் காட்டுவதையும், 2023-ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாகக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது அரசாங்க அமைப்புகள், தொழில் வல்லுநர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு விவாதங்களில் ஈடுபடுவதற்கும், கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதற்கும், விவசாய உணவுத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கும், நெட்வொர்க்கிங் மற்றும் வணிக தளத்தை வழங்கும்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய உணவு பதப்படுத்தும் துறையின் புதுமை மற்றும் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உணவு பதப்படுத்தும் தொழில்துறையின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு 48 அமர்வுகள் நடத்தப்படுகிறது. இது தவிர, நிதி வலுவூட்டல், தர உத்தரவாதம் மற்றும் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமைகளையும் வலியுறுத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் முக்கிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் உட்பட 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வெளிநாட்டு வாங்குபவர்களுடன், விற்பனையாளர் சந்திப்பும் இடம்பெறுகிறது. இந்நிகழ்வில், நெதர்லாந்து கூட்டாளி நாடாக செயல்படும் நிலையில், ஜப்பான் நிகழ்வின் முக்கிய நாடாக இருக்கிறது.

Tags: PM ModidelhiInaguratesWorld Food India 2023
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர் எ.வ.வேலுவின் பினாமியான கரூர் பத்மா வீட்டில் ஜ.டி. ரெய்டு!

Next Post

மக்களே உஷார்!: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies