அமர் பிரசாத் ரெட்டிக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன்!
Jan 14, 2026, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமர் பிரசாத் ரெட்டிக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன்!

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டிக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்புறம் இருந்த பாஜக கொடிக்கம்பத்தைக் கடந்த 21-ம் தேதி சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றிய போது, காவல்துறையினருக்கும் பாஜக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஜேசிபி வாகனத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறி, தமிழக பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கானாத்தூர் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் 2 வழக்குகளில் போலீசார் அமர் பிரசாத் ரெட்டியைக் கைது செய்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த முதல்வர் படத்தை அகற்றியதாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

அதேபோல, வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு வழக்கில் நவம்பர் 10 -ம் தேதி வரை அமர் பிரசாத்துக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஒரு வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி-க்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மற்றொரு வழக்கில், தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டுப்பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு நவம்பர் 3 -ம் தேதி வரை ஆலந்தூர் நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்துள்ளது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் அண்ணாமலை நடைப் பயணத்தின்போது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதலமைச்சர் படத்தின் மீது பிரதமர் படத்தை ஒட்டிய வழக்கில் ஜாமீன் கோரிய மனு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: bjphigh courtamal prasad reddy
ShareTweetSendShare
Previous Post

திருக்கோவில் சொத்துக்களை பாதுகாப்பது தான் அரசின் கடைமை!

Next Post

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies