ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் முதல் பெங்களுருவில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இரண்டாம் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன. ஆஸ்திரேலியா விளையாடிய 6 போட்டிகளில் முதல் 2 போட்டியில் தோல்வியும் பின்பு விளையாடிய 4 போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதல் நான்கு இடத்தை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
அதேபோல் இங்கிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றிப் பெற்று 5 போட்டிகளில் தோல்வியடைந்து 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் வார்னர், மேக்ஸ்வெல் மற்றும் ஹெட் ஆகியோர் அசத்தலான பார்மில் உள்ளன. பந்துவீச்சில் மட்டும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டி உள்ளது.
மறுமுனையில் இங்கிலாந்து அணியில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்தாலும், களத்தில் சிறப்பாக செயல்பட முடியாமல் தவித்து வருகின்றனர்.
மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 155 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 87 முறையும், இங்கிலாந்து அணி 63 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் டிராவில் முடிய, 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
நரேந்திர மோடி மைதானத்தில் இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளில் பேட்ஸ்மேன்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். இன்றையப் போட்டியிலும் அதிகப்படியான ரன்கள் குவிக்கப்பட வாய்ப்புள்ளது. டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்து பெரிய இலக்கை நிர்ணயிக்கவே விரும்பும்.
மேலும் இந்தப் போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் ஆஸ்திரேலியா அணி 59% வெற்றி பெரும் என்றும் இங்கிலாந்து அணி 41% வெற்றி பெரும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.