ஊழல்வாதிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: சத்தீஸ்கரில் பிரதமர் மோடி உறுதி!
Mar 15, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: சத்தீஸ்கரில் பிரதமர் மோடி உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, ஊழல்கள் குறித்து கடுமையாக விசாரிக்கப்பட்டு, உங்களைக் கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. முதல்கட்டமாக வரும் 7-ம் தேதி 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது.

எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கர் அரசு உங்களைக் கொள்ளையடிக்க எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. மகாதேவ் என்கிற பெயரைக்கூட விட்டு வைக்கவில்லை.

2 நாட்களுக்கு முன்பு ராய்ப்பூரில் பெரிய ஆபரேஷன் நடந்தது. அப்போது, அதிக கரன்ஸி நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பணம் சூதாட்டக்காரர்களுக்கும், பந்தயம் கட்டுபவர்களுக்கும் சொந்தமானது என்று மக்கள் சொல்கிறார்கள். இந்த கொள்ளைப் பணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளை நிரப்புகிறார்கள். இந்த மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட துபாயில் அமர்ந்திருப்பவர்களுடன் சத்தீஸ்கர் மக்களுக்கு என்ன தொடர்பு உள்ளது என்பதை மாநில அரசும், முதலமைச்சரும் சொல்ல வேண்டும்.

பணம் கைப்பற்றப்பட்டது வெளிச்சத்துக்கு வந்ததும் முதல்வர் குழப்பமடைந்திருக்கிறார். எங்கள் தலைவர்கள் மீது பணம் திணிக்கப்படும் என்றும், காவல்துறையை அனுப்புவார்கள் என்றும் உள்ளூர் தலைவர்கள் சொல்வதாக கேள்விப்பட்டேன். காங்கிரஸ் மோடியை இரவு பகலாக திட்டுகிறது. தற்போது முதல்வர் நாட்டின் புலனாய்வு அமைப்புகளையும் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கி இருக்கிறார்.

ஆனால், மோடி முறைகேடுகளுக்கு பயப்படுவதில்லை என்பதை சத்தீஸ்கர் மக்களுக்கு நான் கூற விரும்புகிறேன். ஊழல்வாதிகளை சமாளிக்க மோடியை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறீர்கள். ஆகவே, சத்தீஸ்கரில் கொள்ளையடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பைசாவிற்கும் அவர்களிடமிருந்து கணக்குக் கேட்கப்படும். சத்தீஸ்கரின் ஊழல் அரசாங்கம் ஒன்றன் பின் ஒன்றாக உங்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது.

மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, இதுபோன்ற ஊழல்கள் குறித்து கடுமையாக விசாரிக்கப்பட்டு, உங்களைக் கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். நாங்கள் சொல்வதைச் செய்வோம் என்பதுதான் பா.ஜ.க.வின் சாதனை. சத்தீஸ்கர் பா.ஜ.க.வால் உருவாக்கப்பட்டது, சத்தீஸ்கரை பா.ஜ.க. வடிவமைக்கும் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் பொய்கள் பா.ஜ.க.வின் முன் நிற்கிறது. ஊழல் மூலம் தனது கஜானாவை நிரப்புவதே காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை. சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை உள்ள ஏழைகளை காங்கிரஸ் வெறுக்கிறது. ஏழைகள் எப்போதும் தன் முன் நின்று மன்றாட வேண்டும் என்று விரும்புகிறது. எனவே, ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது.

மேலும், ஏழைகளுக்காக மத்திய அரசு தொடங்கும் பணிகளை இங்குள்ள காங்கிரஸ் அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்தி தடுக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸின் அநீதியையும் ஊழலையும் பொறுத்துக் கொண்டுள்ளீர்கள். என்னை நம்புங்கள் இன்னும் 30 நாட்களே உள்ளது. அதன் பிறகு இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்” என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

Tags: PM ModiChhattisgarhelection compaign
ShareTweetSendShare
Previous Post

புலிகள் பாதுகாப்புத் தொடர்பான கலைக் கண்காட்சி: குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Next Post

சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக எதிர்க்கவில்லை – அமித் ஷா

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies