முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
Mar 15, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக வலம் வரும் முகேஷ் அம்பானிக்கு, இ மெயில் மூலம் தொடர் கொலை மிரட்டல் விடுத்த தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி. பிரபல தொழிலதிபரான இவர், உலக கோடீஸ்வரர்களில் ஒருவராகவும், இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராகவும் வலம் வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபரிடமிருந்து இ மெயில் வந்தது. அந்த இ மெயிலில், “எனக்கு 20 கோடி ரூபாய் தர வேண்டும். தவறினால் சுட்டு கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடுபவர்கள் இருக்கிறார்கள்” என்று கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

இதுகுறித்து தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீஸில் புகார் செய்தார். இதன்பேரில் மும்பை காம்தேவி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, முகேஷ் அம்பானிக்கு மீண்டும் இ மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.

அந்த மெயிலில் “நான் 20 கோடி ரூபாய்தான் கேட்டேன். ஆனால், நீங்கள் எனக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே, தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளேன். நீங்கள் எனக்கு இனி 200 கோடி ரூபாய் தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறியிருந்தார். இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, மூன்றாவதாக 400 கோடி ரூபாய் கேட்டு மீண்டும் இ மெயில் வந்தது. இதைத் தொடர்ந்து மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதேபோல, மும்பை காம்தேவி காவல் நிலைய போலீஸாரும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில், முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெலங்கானாவைச் சேர்ந்த 19 வயது இளைஞரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில், தொடர்ந்து 5 முறை முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 8-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த நபர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

Tags: ArrestMukesh AmbaniDeath threadYourthTelangan
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியல் ( 04/11/2023 )

Next Post

இங்கிலாந்து அணிக்கு 287 ரன்கள் இலக்கு !

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies