மோசமான சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி !
Jan 14, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசமான சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி படைத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற 35 வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகாள் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 95 ரன்களும் விளாசினர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது வாசிம் ஜூனியர் 10 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஆனால் நட்சத்திர பந்துவீச்சாளரான ஹாரிஸ் ராஃப் 10 ஓவர்களில் 85 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பாகிஸ்தான் பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

இந்த மோசமான சாதனை 17 நிமிடங்களில் முறியடிக்கப்பட்டது. இதன்பின் பந்துவீசிய ஷாகின் அப்ரிடியின் கடைசி ஓவரில், 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் மூலமாக ஷாகின் அப்ரிடி 10 ஓவர்களில் 90 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இதன் மூலம் ஹாரிஸ் ராஃபின் சாதனையை சில நிமிடங்களிலேயே ஷாகின் அப்ரிடியால் முறியடிக்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தவர்கள் பட்டியலில் ஷாகின் அப்ரிடி 6வது இடத்தை பிடித்துள்ளார்.

முதலிடத்தில் முன்னாள் வீரர் வஹாப் ரியாஸ் 10 ஓவர்களில் 110 ரன்கள் விட்டுக் கொடுத்ததே சாதனையாக உள்ளது. மேலும், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகின் அப்ரிடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஷாகின் அப்ரிடி விளையாடிய கடைசி 23 ஒருநாள் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தி வந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஷாகின் அப்ரிடி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை.

ஷாகின் அப்ரிடி வீசிய கடைசி ஓவரில் சான்ட்னர் கொடுத்த கேட்சையும் ஹசன் அலி தவறவிட்டார். இதன் மூலம் 23 போட்டிகளுக்கு பின் முதல்முறையாக ஷாகின் அப்ரிடி விக்கெட் வீழ்த்த முடியாமல் இருக்கிறார்.

Tags: sportsnewscricket pakistan
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் தொடரில் யார் யார் விளையாடப் போகிறார்கள் ?

Next Post

மாங்கல்ய பலம் – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies