இளம் விஞ்ஞானிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி: விமானப்படைத் தளபதி தகவல்!
Sep 10, 2025, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளம் விஞ்ஞானிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி: விமானப்படைத் தளபதி தகவல்!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளம் விமானிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌத்ரி தெரிவித்திருக்கிறார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படையின் போர் விமான பயிற்சிப் பள்ளியின் 75-வது பிளாட்டினம் ஜூப்ளி விழா நடைபெற்றது. விழாவில், இப்பள்ளியில் பயின்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் உயரதிகாரிகள், மூத்த விமானிகள், முன்னாள் வீரர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.

தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. சர்வதேச அளவில் விமானிகள், விமான பயிற்றுனர்களுக்கான பயிற்சிகள் குறித்த கருத்தரங்குகளும் நடந்தன. விமானப்படை சாகச நிகழ்ச்சியில், பல்வேறு ரக விமானங்கள் தாழ்வாக பறந்தும், வானத்தில் பல்டி அடித்தும் சாகசம் செய்தன.

குறிப்பாக, விமானப் படையின் ‘ஆகாச கங்கா’ குழுவைச் சேர்ந்த 9 வீரர்கள் ஹெலிகாப்டரில் 9,000 அடி உயரத்தில் இருந்து ‘ப்ரீ டைவிங்’ செய்து, ‘பாராசூட்’ உதவியுடன் தரை இறங்கி இலக்கை வந்தடைந்தனர். மேலும், 3 வீரர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேசியக்கொடி போன்று ‘ஸ்கை டைவிங்’ செய்தனர். அதேபோல, 2 வீரர்கள் விமானப் படையின் கொடியை ஏந்தியவாறு ஒன்றாக கைகளை இணைத்து குதித்தனர்.

இவ்விழாவில், விமானப்படைத் தளபதி வி.ஆா்.சௌத்ரி, பயிற்றுநா் பள்ளியின் பாரம்பரிய மண்டபத்தைத் திறந்து வைத்து பாா்வையிட்டாா். தொடர்ந்து, தளபதி வீ.ஆர்.சவுத்ரி பேசுகையில், “விமானப் படையில் புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். நான் விமானப் பயிற்சி பெற்ற காலத்தில், தொழில்நுட்பங்கள் பழமையாக இருந்தது.

அதைப் போல் இல்லாமல், தற்போது 20 வயதுக்குள் விமானப் படையில் சேரும் வீரர்கள், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியில் விமானம் ஓட்டுவது எப்படி, தரையிறக்குவது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தாங்களாவே கற்றுக் கொள்கின்றனர். வரும் காலத்தில், விமானிகளுக்குத் தேவையான சிறப்பான பயிற்சிகளை வழங்க ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்” என்றார்.

விழாவில், நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்களை கௌரவிக்கும் வகையில், மறைந்த போா் விமானி என்.ஜெ.எஸ்.செகூனின் உருவச்சிலை அமைந்த ‘ஸ்மிருதி ஸ்தலம்’ என்று அழைக்கப்படும் போா் நினைவிடத்தை, 1999-ம் ஆண்டில் ‘சபேத் சாகா்’ விமானத் தாக்குதலின்போது மறைந்த ஸ்குவாட்ரன் தலைவரும், பயிற்றுநா் பள்ளியின் முன்னாள் மாணவருமான அஜய் அஹுஜாவின் மனைவி அல்கா அஹுஜா திறந்து வைத்தாா்.

Tags: IAF Fighter Training School75th Platinum Jubilee Celebration
ShareTweetSendShare
Previous Post

கனடாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தம்!

Next Post

நவம்பர் 19… ஏர் இந்தியா விமானப் பயணம்… ஆபத்து: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies