இளம் விஞ்ஞானிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி: விமானப்படைத் தளபதி தகவல்!
Mar 15, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளம் விஞ்ஞானிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி: விமானப்படைத் தளபதி தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளம் விமானிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌத்ரி தெரிவித்திருக்கிறார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படையின் போர் விமான பயிற்சிப் பள்ளியின் 75-வது பிளாட்டினம் ஜூப்ளி விழா நடைபெற்றது. விழாவில், இப்பள்ளியில் பயின்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் உயரதிகாரிகள், மூத்த விமானிகள், முன்னாள் வீரர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.

தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. சர்வதேச அளவில் விமானிகள், விமான பயிற்றுனர்களுக்கான பயிற்சிகள் குறித்த கருத்தரங்குகளும் நடந்தன. விமானப்படை சாகச நிகழ்ச்சியில், பல்வேறு ரக விமானங்கள் தாழ்வாக பறந்தும், வானத்தில் பல்டி அடித்தும் சாகசம் செய்தன.

குறிப்பாக, விமானப் படையின் ‘ஆகாச கங்கா’ குழுவைச் சேர்ந்த 9 வீரர்கள் ஹெலிகாப்டரில் 9,000 அடி உயரத்தில் இருந்து ‘ப்ரீ டைவிங்’ செய்து, ‘பாராசூட்’ உதவியுடன் தரை இறங்கி இலக்கை வந்தடைந்தனர். மேலும், 3 வீரர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேசியக்கொடி போன்று ‘ஸ்கை டைவிங்’ செய்தனர். அதேபோல, 2 வீரர்கள் விமானப் படையின் கொடியை ஏந்தியவாறு ஒன்றாக கைகளை இணைத்து குதித்தனர்.

இவ்விழாவில், விமானப்படைத் தளபதி வி.ஆா்.சௌத்ரி, பயிற்றுநா் பள்ளியின் பாரம்பரிய மண்டபத்தைத் திறந்து வைத்து பாா்வையிட்டாா். தொடர்ந்து, தளபதி வீ.ஆர்.சவுத்ரி பேசுகையில், “விமானப் படையில் புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். நான் விமானப் பயிற்சி பெற்ற காலத்தில், தொழில்நுட்பங்கள் பழமையாக இருந்தது.

அதைப் போல் இல்லாமல், தற்போது 20 வயதுக்குள் விமானப் படையில் சேரும் வீரர்கள், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியில் விமானம் ஓட்டுவது எப்படி, தரையிறக்குவது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தாங்களாவே கற்றுக் கொள்கின்றனர். வரும் காலத்தில், விமானிகளுக்குத் தேவையான சிறப்பான பயிற்சிகளை வழங்க ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்” என்றார்.

விழாவில், நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்களை கௌரவிக்கும் வகையில், மறைந்த போா் விமானி என்.ஜெ.எஸ்.செகூனின் உருவச்சிலை அமைந்த ‘ஸ்மிருதி ஸ்தலம்’ என்று அழைக்கப்படும் போா் நினைவிடத்தை, 1999-ம் ஆண்டில் ‘சபேத் சாகா்’ விமானத் தாக்குதலின்போது மறைந்த ஸ்குவாட்ரன் தலைவரும், பயிற்றுநா் பள்ளியின் முன்னாள் மாணவருமான அஜய் அஹுஜாவின் மனைவி அல்கா அஹுஜா திறந்து வைத்தாா்.

Tags: IAF Fighter Training School75th Platinum Jubilee Celebration
ShareTweetSendShare
Previous Post

கனடாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தம்!

Next Post

நவம்பர் 19… ஏர் இந்தியா விமானப் பயணம்… ஆபத்து: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies