நவம்பர் 19... ஏர் இந்தியா விமானப் பயணம்... ஆபத்து: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!
Sep 12, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவம்பர் 19… ஏர் இந்தியா விமானப் பயணம்… ஆபத்து: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நவம்பர் 19-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப் போருக்கு ஆபத்து ஏற்படும் என்று காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டிருக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், அன்றுதான் இந்தியாவில் ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கியர்களுக்கான நீதி (SFJ) என்கிற தடை செய்யப்பட்ட அமைப்பின் நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னூன். காலிஸ்தான் தீவிரவாதியான இவர், புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில். “நவம்பர் 19-ம் தேதிக்குப் பிறகு சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம்.

நவம்பர் 19-ம் தேதியன்று ஏர் இந்தியா விமானங்களை இயக்க அனுமதிக்க முடியாது. மேலும், நவம்பர் 19-ம் தேதி முதல் உலகளாவிய முற்றுகை இருக்கும். ஆகவே, ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம் என்று சீக்கிய மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அப்படி பயணித்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், நவம்பர் 19-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, அதன் பெயர் ஷாஹித் பியாந்த் சிங் விமான நிலையம் என மாற்றப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், நவம்பர் 19-ம் தேதிதான் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

காலிஸ்தான் தீவிரவாதி பன்னூன் மிரட்டல் விடுப்பது இது முதல் முறையல்ல. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்திப் சிங் நிஜர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதைத் தொடர்ந்து, இந்திய இந்துக்கள் அனைவரும் கனடாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் பன்னூன் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Air indiakhalistanterroristgurpatwant singh pannunThreaten
Share
Tweet
SendShare
Previous Post

இளம் விஞ்ஞானிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி: விமானப்படைத் தளபதி தகவல்!

Next Post

சபரிமலையில் புதிய நடைமுறை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies