வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை : பிரதமர் மோடி!
Aug 15, 2025, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை : பிரதமர் மோடி!

ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் : பிரதமர் நரேந்திர மோடி!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை என்றும், ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் 5-6 தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த போதிலும், பழங்குடியின சமூகத்தின் நலனுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என்றார்.

அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் நாட்டிலேயே முதல்முறையாக பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கோவிட் ஊரடங்கின் போது ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உணவை வழங்குவார்கள் என்பது தம்மை கவலையடையச் செய்ததாகவும், எந்த சூழ்நிலையிலும் நாட்டு மக்களை காப்பாற்ற போராட முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் விளைவாக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜ்னா மூலம் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்க முடிவு செய்ததாகவும் மோடி குறிப்பிட்டார்.
“நான் வறுமையிலிருந்து வந்தவன். வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை. ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் ஆட்சியில், பல லட்சம் கோடி ஊழல்கள் நடந்தன, ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை, இதனால் சேமிக்கப்படும் பணம் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்காக செலவிடப்படுகிறது என்று அவர் கூறினார்.
நாட்டில் மொபைல் போன்கள் பெருமளவில் கிடைப்பதைக் குறிப்பிட்ட மோடி, தனது அரசாங்கத்தின் கொள்கைகளாலும், மக்களுக்கு பெரும் சேமிப்பை உறுதி செய்வதாலும் நாட்டில் மொபைல் போன்கள் மற்றும் டேட்டா சேவைகள் மலிவாக கிடைப்பதாக கூறினார்.

தற்பேது மொபைல் போன் மற்றும் டேட்டாவுக்கு மாதந்தோறும் ரூ.300-400 கட்டணம் செலவு ஆவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ரூ.4,000-5,000 ஆக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியை மகன்களுக்காக கைப்பற்றுவதில் அக்கட்சியை சேர்ந்த இரு மூத்த தலைவர்கள் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

மேலும், அரசு நிறுவிய ஜனஉஷதி கேந்திராக்கள் மருந்துகளுக்கு 80 சதவீதம் தள்ளுபடி அளித்து நாட்டில் உள்ள ஏழை மக்களின் 25,000 கோடி ரூபாயை காப்பாற்றியதாகவும் மோடி கூறினார்.

Tags: PM Modipm narendra modi speech
ShareTweetSendShare
Previous Post

மணல் சிற்பத்தால் விராட் கோலிக்கு வாழ்த்து !

Next Post

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து: வாகனங்கள் மீது மோதி விபத்து!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies