வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை : பிரதமர் மோடி!
Oct 2, 2025, 04:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை : பிரதமர் மோடி!

ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் : பிரதமர் நரேந்திர மோடி!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை என்றும், ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் 5-6 தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த போதிலும், பழங்குடியின சமூகத்தின் நலனுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என்றார்.

அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் நாட்டிலேயே முதல்முறையாக பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கோவிட் ஊரடங்கின் போது ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உணவை வழங்குவார்கள் என்பது தம்மை கவலையடையச் செய்ததாகவும், எந்த சூழ்நிலையிலும் நாட்டு மக்களை காப்பாற்ற போராட முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் விளைவாக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜ்னா மூலம் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்க முடிவு செய்ததாகவும் மோடி குறிப்பிட்டார்.
“நான் வறுமையிலிருந்து வந்தவன். வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை. ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் ஆட்சியில், பல லட்சம் கோடி ஊழல்கள் நடந்தன, ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை, இதனால் சேமிக்கப்படும் பணம் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்காக செலவிடப்படுகிறது என்று அவர் கூறினார்.
நாட்டில் மொபைல் போன்கள் பெருமளவில் கிடைப்பதைக் குறிப்பிட்ட மோடி, தனது அரசாங்கத்தின் கொள்கைகளாலும், மக்களுக்கு பெரும் சேமிப்பை உறுதி செய்வதாலும் நாட்டில் மொபைல் போன்கள் மற்றும் டேட்டா சேவைகள் மலிவாக கிடைப்பதாக கூறினார்.

தற்பேது மொபைல் போன் மற்றும் டேட்டாவுக்கு மாதந்தோறும் ரூ.300-400 கட்டணம் செலவு ஆவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ரூ.4,000-5,000 ஆக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியை மகன்களுக்காக கைப்பற்றுவதில் அக்கட்சியை சேர்ந்த இரு மூத்த தலைவர்கள் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

மேலும், அரசு நிறுவிய ஜனஉஷதி கேந்திராக்கள் மருந்துகளுக்கு 80 சதவீதம் தள்ளுபடி அளித்து நாட்டில் உள்ள ஏழை மக்களின் 25,000 கோடி ரூபாயை காப்பாற்றியதாகவும் மோடி கூறினார்.

Tags: PM Modipm narendra modi speech
ShareTweetSendShare
Previous Post

மணல் சிற்பத்தால் விராட் கோலிக்கு வாழ்த்து !

Next Post

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து: வாகனங்கள் மீது மோதி விபத்து!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies