வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை : பிரதமர் மோடி!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை : பிரதமர் மோடி!

ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் : பிரதமர் நரேந்திர மோடி!

Murugesan M by Murugesan M
Nov 5, 2023, 03:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை என்றும், ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் 5-6 தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த போதிலும், பழங்குடியின சமூகத்தின் நலனுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என்றார்.

அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் நாட்டிலேயே முதல்முறையாக பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கோவிட் ஊரடங்கின் போது ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உணவை வழங்குவார்கள் என்பது தம்மை கவலையடையச் செய்ததாகவும், எந்த சூழ்நிலையிலும் நாட்டு மக்களை காப்பாற்ற போராட முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் விளைவாக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜ்னா மூலம் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்க முடிவு செய்ததாகவும் மோடி குறிப்பிட்டார்.
“நான் வறுமையிலிருந்து வந்தவன். வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை. ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் ஆட்சியில், பல லட்சம் கோடி ஊழல்கள் நடந்தன, ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை, இதனால் சேமிக்கப்படும் பணம் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்காக செலவிடப்படுகிறது என்று அவர் கூறினார்.
நாட்டில் மொபைல் போன்கள் பெருமளவில் கிடைப்பதைக் குறிப்பிட்ட மோடி, தனது அரசாங்கத்தின் கொள்கைகளாலும், மக்களுக்கு பெரும் சேமிப்பை உறுதி செய்வதாலும் நாட்டில் மொபைல் போன்கள் மற்றும் டேட்டா சேவைகள் மலிவாக கிடைப்பதாக கூறினார்.

தற்பேது மொபைல் போன் மற்றும் டேட்டாவுக்கு மாதந்தோறும் ரூ.300-400 கட்டணம் செலவு ஆவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ரூ.4,000-5,000 ஆக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியை மகன்களுக்காக கைப்பற்றுவதில் அக்கட்சியை சேர்ந்த இரு மூத்த தலைவர்கள் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

மேலும், அரசு நிறுவிய ஜனஉஷதி கேந்திராக்கள் மருந்துகளுக்கு 80 சதவீதம் தள்ளுபடி அளித்து நாட்டில் உள்ள ஏழை மக்களின் 25,000 கோடி ரூபாயை காப்பாற்றியதாகவும் மோடி கூறினார்.

Tags: PM Modipm narendra modi speech
Share
Tweet
SendShare
Previous Post

மணல் சிற்பத்தால் விராட் கோலிக்கு வாழ்த்து !

Next Post

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து: வாகனங்கள் மீது மோதி விபத்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies