வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை : பிரதமர் மோடி!
Jul 29, 2026, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை : பிரதமர் மோடி!

ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் : பிரதமர் நரேந்திர மோடி!

Murugesan M by Murugesan M
Nov 5, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை என்றும், ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் 5-6 தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த போதிலும், பழங்குடியின சமூகத்தின் நலனுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என்றார்.

அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் நாட்டிலேயே முதல்முறையாக பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கோவிட் ஊரடங்கின் போது ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உணவை வழங்குவார்கள் என்பது தம்மை கவலையடையச் செய்ததாகவும், எந்த சூழ்நிலையிலும் நாட்டு மக்களை காப்பாற்ற போராட முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் விளைவாக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜ்னா மூலம் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்க முடிவு செய்ததாகவும் மோடி குறிப்பிட்டார்.
“நான் வறுமையிலிருந்து வந்தவன். வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை. ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் ஆட்சியில், பல லட்சம் கோடி ஊழல்கள் நடந்தன, ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை, இதனால் சேமிக்கப்படும் பணம் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்காக செலவிடப்படுகிறது என்று அவர் கூறினார்.
நாட்டில் மொபைல் போன்கள் பெருமளவில் கிடைப்பதைக் குறிப்பிட்ட மோடி, தனது அரசாங்கத்தின் கொள்கைகளாலும், மக்களுக்கு பெரும் சேமிப்பை உறுதி செய்வதாலும் நாட்டில் மொபைல் போன்கள் மற்றும் டேட்டா சேவைகள் மலிவாக கிடைப்பதாக கூறினார்.

தற்பேது மொபைல் போன் மற்றும் டேட்டாவுக்கு மாதந்தோறும் ரூ.300-400 கட்டணம் செலவு ஆவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ரூ.4,000-5,000 ஆக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியை மகன்களுக்காக கைப்பற்றுவதில் அக்கட்சியை சேர்ந்த இரு மூத்த தலைவர்கள் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

மேலும், அரசு நிறுவிய ஜனஉஷதி கேந்திராக்கள் மருந்துகளுக்கு 80 சதவீதம் தள்ளுபடி அளித்து நாட்டில் உள்ள ஏழை மக்களின் 25,000 கோடி ரூபாயை காப்பாற்றியதாகவும் மோடி கூறினார்.

Tags: PM Modipm narendra modi speech
ShareTweetSendShare
Previous Post

மணல் சிற்பத்தால் விராட் கோலிக்கு வாழ்த்து !

Next Post

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து: வாகனங்கள் மீது மோதி விபத்து!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies