ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!
Mar 15, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். அரை மணி நேரத்திற்குள்ளாக 7,000 ஏவுகணைகளை செலுத்தியதால் இஸ்ரேல் திணறிப்போனது. மேலும், இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், அந்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, இஸ்ரேல் கடந்த 29 நாட்களாக பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை வழியாக ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளைக் குறிவைத்து குண்டுகளை வீசி வருவதோடு, கப்பல்படை மூலமும் ஏவுகணைகளை செலுத்தி வருகிறது. மேலும், பீரங்கிகள், டாங்கிகள் மூலம் காலாட் படையின் தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தளபதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், அப்பாவி மக்கள் 10,000-க்கும் மேற்பட்டோரும் பலியாகி இருப்பதுதான் சோகம். மேலும், 25,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இது தவிர, இஸ்ரேல் இராணுவத்தின் விமானப்படை நடத்திய தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து கிடக்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, மின்சார வசதி இல்லை, மருத்துவம் பார்க்க மருந்துகள் இல்லை என்று காஸா நகரமே முடங்கிப் போய்க் கிடக்கிறது.

எனினும், ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் போர் முடிவுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருக்கிறார். இதனால், போர் நீண்ட காலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கப் பாதைகளுக்குள்ளும், பதுங்குக் குழிகளுக்குள்ளும் பதுங்கிக் கொண்டு இஸ்ரேல் இராணுவத்தினரை தாக்கி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில்தான், போர் தொடங்கியது முதல் தற்போது வரை ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்திருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகளை அழித்திருக்கிறோம். இதில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் மற்றும் முக்கியத் தலைவர்களின் வீடுகள், தீவிரவாத முகாம்கள் ஆகியவையும் அடக்கம்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IsraelHamas TerroristKaza
ShareTweetSendShare
Previous Post

குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Next Post

பிறந்த நாளுக்கு 100 அடித்து டிரீட் கொடுத்த விராட் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies