ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!
Jul 25, 2025, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். அரை மணி நேரத்திற்குள்ளாக 7,000 ஏவுகணைகளை செலுத்தியதால் இஸ்ரேல் திணறிப்போனது. மேலும், இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், அந்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, இஸ்ரேல் கடந்த 29 நாட்களாக பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை வழியாக ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளைக் குறிவைத்து குண்டுகளை வீசி வருவதோடு, கப்பல்படை மூலமும் ஏவுகணைகளை செலுத்தி வருகிறது. மேலும், பீரங்கிகள், டாங்கிகள் மூலம் காலாட் படையின் தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தளபதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், அப்பாவி மக்கள் 10,000-க்கும் மேற்பட்டோரும் பலியாகி இருப்பதுதான் சோகம். மேலும், 25,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இது தவிர, இஸ்ரேல் இராணுவத்தின் விமானப்படை நடத்திய தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து கிடக்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, மின்சார வசதி இல்லை, மருத்துவம் பார்க்க மருந்துகள் இல்லை என்று காஸா நகரமே முடங்கிப் போய்க் கிடக்கிறது.

எனினும், ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் போர் முடிவுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருக்கிறார். இதனால், போர் நீண்ட காலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கப் பாதைகளுக்குள்ளும், பதுங்குக் குழிகளுக்குள்ளும் பதுங்கிக் கொண்டு இஸ்ரேல் இராணுவத்தினரை தாக்கி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில்தான், போர் தொடங்கியது முதல் தற்போது வரை ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்திருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகளை அழித்திருக்கிறோம். இதில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் மற்றும் முக்கியத் தலைவர்களின் வீடுகள், தீவிரவாத முகாம்கள் ஆகியவையும் அடக்கம்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IsraelHamas TerroristKaza
ShareTweetSendShare
Previous Post

குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Next Post

பிறந்த நாளுக்கு 100 அடித்து டிரீட் கொடுத்த விராட் !

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies