ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!
Apr 29, 2026, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். அரை மணி நேரத்திற்குள்ளாக 7,000 ஏவுகணைகளை செலுத்தியதால் இஸ்ரேல் திணறிப்போனது. மேலும், இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், அந்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, இஸ்ரேல் கடந்த 29 நாட்களாக பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை வழியாக ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளைக் குறிவைத்து குண்டுகளை வீசி வருவதோடு, கப்பல்படை மூலமும் ஏவுகணைகளை செலுத்தி வருகிறது. மேலும், பீரங்கிகள், டாங்கிகள் மூலம் காலாட் படையின் தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தளபதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், அப்பாவி மக்கள் 10,000-க்கும் மேற்பட்டோரும் பலியாகி இருப்பதுதான் சோகம். மேலும், 25,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இது தவிர, இஸ்ரேல் இராணுவத்தின் விமானப்படை நடத்திய தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து கிடக்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, மின்சார வசதி இல்லை, மருத்துவம் பார்க்க மருந்துகள் இல்லை என்று காஸா நகரமே முடங்கிப் போய்க் கிடக்கிறது.

எனினும், ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் போர் முடிவுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருக்கிறார். இதனால், போர் நீண்ட காலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கப் பாதைகளுக்குள்ளும், பதுங்குக் குழிகளுக்குள்ளும் பதுங்கிக் கொண்டு இஸ்ரேல் இராணுவத்தினரை தாக்கி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில்தான், போர் தொடங்கியது முதல் தற்போது வரை ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்திருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகளை அழித்திருக்கிறோம். இதில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் மற்றும் முக்கியத் தலைவர்களின் வீடுகள், தீவிரவாத முகாம்கள் ஆகியவையும் அடக்கம்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IsraelHamas TerroristKaza
ShareTweetSendShare
Previous Post

குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Next Post

பிறந்த நாளுக்கு 100 அடித்து டிரீட் கொடுத்த விராட் !

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies