ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 06:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். அரை மணி நேரத்திற்குள்ளாக 7,000 ஏவுகணைகளை செலுத்தியதால் இஸ்ரேல் திணறிப்போனது. மேலும், இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், அந்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, இஸ்ரேல் கடந்த 29 நாட்களாக பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை வழியாக ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளைக் குறிவைத்து குண்டுகளை வீசி வருவதோடு, கப்பல்படை மூலமும் ஏவுகணைகளை செலுத்தி வருகிறது. மேலும், பீரங்கிகள், டாங்கிகள் மூலம் காலாட் படையின் தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தளபதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், அப்பாவி மக்கள் 10,000-க்கும் மேற்பட்டோரும் பலியாகி இருப்பதுதான் சோகம். மேலும், 25,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இது தவிர, இஸ்ரேல் இராணுவத்தின் விமானப்படை நடத்திய தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து கிடக்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, மின்சார வசதி இல்லை, மருத்துவம் பார்க்க மருந்துகள் இல்லை என்று காஸா நகரமே முடங்கிப் போய்க் கிடக்கிறது.

எனினும், ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் போர் முடிவுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருக்கிறார். இதனால், போர் நீண்ட காலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கப் பாதைகளுக்குள்ளும், பதுங்குக் குழிகளுக்குள்ளும் பதுங்கிக் கொண்டு இஸ்ரேல் இராணுவத்தினரை தாக்கி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில்தான், போர் தொடங்கியது முதல் தற்போது வரை ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்திருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகளை அழித்திருக்கிறோம். இதில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் மற்றும் முக்கியத் தலைவர்களின் வீடுகள், தீவிரவாத முகாம்கள் ஆகியவையும் அடக்கம்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IsraelHamas TerroristKaza
Share
Tweet
SendShare
Previous Post

குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Next Post

பிறந்த நாளுக்கு 100 அடித்து டிரீட் கொடுத்த விராட் !

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies