காங்கிரஸ் மோசடிக் கட்சி: அகிலேஷ் கருத்துக்கு மத்திய அமைச்சர் வரவேற்பு!
Oct 26, 2025, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் மோசடிக் கட்சி: அகிலேஷ் கருத்துக்கு மத்திய அமைச்சர் வரவேற்பு!

Web Desk by Web Desk
Nov 6, 2023, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருந்த நிலையில், அக்கருத்துடன் தான் உடன்படுவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், மத்தியப் பிரதேச மாநிலம் திகம்கர் மாவட்டம் ஜதாரா தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி. கூட்டணிக் கட்சியான எங்களுக்கே துரோகம் இழைத்து விட்டது. அப்படி இருக்க பொதுமக்களாகிய நீங்கள் எப்படி முக்கியமானவர்களாக இருக்க முடியும். ஆகவே, அக்கட்சியிடம் எச்சரிக்கையாக இருங்கள். அக்கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறினார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “பொதுவாக அகிலேஷ் யாதவ் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் நேற்று அவர் ஒரு நல்ல விளக்கத்தை அளித்து, காங்கிரஸ் ஒரு மோசடி கட்சி என்று கூறியிருக்கிறார். அவரது இந்தக் கருத்தில் நான் உடன்படுகிறேன். காங்கிரஸ் கட்சி செய்த மோசடிகள் குறித்த சில உண்மைகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்…

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 5 வாக்குறுதிகளை அளித்தது. அதாவது, அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 10 கிலோ அரிசி இலவசம். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம்தோறும் 3,000 உதவித்தொகை.

டிப்ளமோ படித்தவர்களுக்கு (18-25 வயதுக்குட்பட்டவர்கள்) 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை. மேலும், பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அப்படியே பல்டி அடித்து விட்டது. பட்டப்படிப்பு முடித்து முந்தைய ஆண்டு வேலையில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என்றார்கள். ஆகவே, காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி என்று அகிலேஷ் சொன்னதில் தவறேதும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: Central MinisterMadya PradeshRajeev Chandra sekarAkilesh yadav
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு !

Next Post

அமைச்சர் ரகுபதி மீது ஊழல் வழக்குகள் உள்ளன! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies