காங்கிரஸ் மோசடிக் கட்சி: அகிலேஷ் கருத்துக்கு மத்திய அமைச்சர் வரவேற்பு!
Jun 14, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் மோசடிக் கட்சி: அகிலேஷ் கருத்துக்கு மத்திய அமைச்சர் வரவேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருந்த நிலையில், அக்கருத்துடன் தான் உடன்படுவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், மத்தியப் பிரதேச மாநிலம் திகம்கர் மாவட்டம் ஜதாரா தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி. கூட்டணிக் கட்சியான எங்களுக்கே துரோகம் இழைத்து விட்டது. அப்படி இருக்க பொதுமக்களாகிய நீங்கள் எப்படி முக்கியமானவர்களாக இருக்க முடியும். ஆகவே, அக்கட்சியிடம் எச்சரிக்கையாக இருங்கள். அக்கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறினார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “பொதுவாக அகிலேஷ் யாதவ் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் நேற்று அவர் ஒரு நல்ல விளக்கத்தை அளித்து, காங்கிரஸ் ஒரு மோசடி கட்சி என்று கூறியிருக்கிறார். அவரது இந்தக் கருத்தில் நான் உடன்படுகிறேன். காங்கிரஸ் கட்சி செய்த மோசடிகள் குறித்த சில உண்மைகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்…

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 5 வாக்குறுதிகளை அளித்தது. அதாவது, அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 10 கிலோ அரிசி இலவசம். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம்தோறும் 3,000 உதவித்தொகை.

டிப்ளமோ படித்தவர்களுக்கு (18-25 வயதுக்குட்பட்டவர்கள்) 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை. மேலும், பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அப்படியே பல்டி அடித்து விட்டது. பட்டப்படிப்பு முடித்து முந்தைய ஆண்டு வேலையில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என்றார்கள். ஆகவே, காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி என்று அகிலேஷ் சொன்னதில் தவறேதும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: Central MinisterMadya PradeshRajeev Chandra sekarAkilesh yadav
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு !

Next Post

அமைச்சர் ரகுபதி மீது ஊழல் வழக்குகள் உள்ளன! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies