மேற்கு ஆசியா கடலில் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!
Mar 15, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு ஆசியா கடலில் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலுக்கு ஆதரவாக மேற்கு ஆசியாவின் கடல் பகுதியில் 2 விமானம் தாக்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி இருக்கும் அமெரிக்கா, தற்போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் அனுப்பி வைத்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் தீடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொலை செய்ததோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 1,400 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாத அளவுக்கு இஸ்ரேல் பதிலடித் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் மற்றும் தீவிரவாதிகள் 500 பேர் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள் என 2,500 இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.

எனினும், போர் முடிவுக்கு வந்த பாடில்லை. இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, பல்வேறு நாடுகளும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இதனால், 30-வது நாளாக போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அதேசமயம், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.  இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி வருதோடு, 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களையும் மேற்கு ஆசியா கடல் பகுதியில் நிலைநிறுத்தி இருக்கிறது. இந்த சூழலில், தற்போது அணுசக்திக் கப்பலையும் மேற்கு ஆசியாவின் கடல் பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. இக்கப்பல் கெய்ரோ நகருக்கு வடகிழக்கே அல் சலாம் பாலத்தின் கீழ் சூயஸ் கால்வாயை வந்தடைந்திருக்கிறது.

அப்பகுதியில் ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டிருக்கும் 2 விமானம்தாங்கி கப்பல்களுடன், இந்தக் கப்பலும் இணைந்திருக்கிறது. இதேபோல, அமெரிக்க கப்பல்படையில் 4 கப்பல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அதிக திறன் வாய்ந்த 154 தோமஹாக் ரக ஏவுகணைகளை ஏந்தி செல்லக் கூடியது. ஒவ்வொரு தோமஹாக்கும் 1,000 பவுண்டு எடை கொண்ட அதிக வெடிக்கக் கூடிய திறன் பெற்ற ஆயுதங்களை சுமந்து செல்ல கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் போர் விரிவடைந்து விடக்கூடாது என்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில், மேற்கு ஆசிய நாடுகளான துருக்கி, ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், மேற்கு கரை மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.

Tags: WARIsraelHamasAmerican Ship
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் ரகுபதி மீது ஊழல் வழக்குகள் உள்ளன! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

கேரள குண்டுவெடிப்பு : டொமினிக் மார்ட்டிக்கு 10 நாள் போலீஸ் காவல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies