மேற்கு ஆசியா கடலில் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!
Jun 15, 2026, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு ஆசியா கடலில் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலுக்கு ஆதரவாக மேற்கு ஆசியாவின் கடல் பகுதியில் 2 விமானம் தாக்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி இருக்கும் அமெரிக்கா, தற்போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் அனுப்பி வைத்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் தீடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொலை செய்ததோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 1,400 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாத அளவுக்கு இஸ்ரேல் பதிலடித் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் மற்றும் தீவிரவாதிகள் 500 பேர் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள் என 2,500 இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.

எனினும், போர் முடிவுக்கு வந்த பாடில்லை. இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, பல்வேறு நாடுகளும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இதனால், 30-வது நாளாக போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அதேசமயம், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.  இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி வருதோடு, 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களையும் மேற்கு ஆசியா கடல் பகுதியில் நிலைநிறுத்தி இருக்கிறது. இந்த சூழலில், தற்போது அணுசக்திக் கப்பலையும் மேற்கு ஆசியாவின் கடல் பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. இக்கப்பல் கெய்ரோ நகருக்கு வடகிழக்கே அல் சலாம் பாலத்தின் கீழ் சூயஸ் கால்வாயை வந்தடைந்திருக்கிறது.

அப்பகுதியில் ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டிருக்கும் 2 விமானம்தாங்கி கப்பல்களுடன், இந்தக் கப்பலும் இணைந்திருக்கிறது. இதேபோல, அமெரிக்க கப்பல்படையில் 4 கப்பல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அதிக திறன் வாய்ந்த 154 தோமஹாக் ரக ஏவுகணைகளை ஏந்தி செல்லக் கூடியது. ஒவ்வொரு தோமஹாக்கும் 1,000 பவுண்டு எடை கொண்ட அதிக வெடிக்கக் கூடிய திறன் பெற்ற ஆயுதங்களை சுமந்து செல்ல கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் போர் விரிவடைந்து விடக்கூடாது என்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில், மேற்கு ஆசிய நாடுகளான துருக்கி, ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், மேற்கு கரை மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.

Tags: WARIsraelHamasAmerican Ship
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் ரகுபதி மீது ஊழல் வழக்குகள் உள்ளன! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

கேரள குண்டுவெடிப்பு : டொமினிக் மார்ட்டிக்கு 10 நாள் போலீஸ் காவல்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies